Skip to main content

Posts

Showing posts from October, 2020

குறுக்கெழுத்துப் புதிர் - 05 | CROSSWORDS - 05 | மத்தேயு 21 - 28

  by  ஷப்னிகா  அக்கா >>> குறுக்கெழுத்துப் புதிர் - 05 மத்தேயு 21 - 28 குறுக்கெழுத்துப் புதிர் - 05 க்கான விடைகள் 31.10.2020 அன்று  விடைகள் | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

நல்லவரே என் இயேசுவே | Nallavare En Yesuve | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

இயேசுவின் சீஷரில் இயேசுவின் சாயல் | BIBLE STUDY

by  பிறேமன் அண்ணா >>> என் அன்பின் தம்பி தங்கைமாரே, இயேசு  சுவாமியின் நல்ல சீஷர்களாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிற நம் ஒவ்வொருவரிலும் இயேசு சுவாமியின் சாயல் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம். இயேசுவின் சீஷர் என எம்மை அர்ப்பணிக்கும்போது , நம்மில் உண்மையாகவே இயேசு சுவாமியைப் போன்ற குணநலன்களும் வாழ்க்கைமுறையும் இருக்கின்றதா என்பதை நாம் சிந்தித்துக்கொள்ளவேண்டும். இயேசு சுவாமியின் சாயல் எம்மில் உள்ளதா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம்? சிந்திப்போமா?  நம் ஆண்டவராகிய தேவன் நம்மை சிருஷ்டித்து உருவாக்கியபோது, நம்மைத் தமது சாயலாக உருவாக்கினார். ஆதியாகமம் 1: 26 ல், "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" என்று சொல்லியிருப்பதை நாம் வாசிக்கிறோம். அப்படியானால், நம்மை மனுஷராய் படைத்தபோதே தமது சாயலையும் தமது ரூபத்தையும் நம்மில் ஆண்டவர் வைத்திருக்கிறார். தமது குணாதிசயங்கள், தமது எண்ணங்கள் தமது உணர்வுகள், தமது விருப்பங்கள் என அவருடைய சாயலை நம்மிலே பதிந்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாது, நம்மைப் படைத்தபோது தமது ரூபத்தின்படியே

குறுக்கெழுத்துப் புதிர் - 04 | CROSSWORDS - 04 | மத்தேயு 16 - 20

by ஷப்னிகா  அக்கா *** குறுக்கெழுத்துப் புதிர் - 04 மத்தேயு 16 - 20 குறுக்கெழுத்துப் புதிர் - 04 க்கான விடைகள் 25.10.2020 அன்று  விடைகள் | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

பரம பிதாவின் கைகளில் பென்சில்கள் நாங்கள் | GEM STONES

by  டேவிட் அண்ணா >>> அன்புள்ள தம்பி தங்கைமாரே, நம்முடைய வாழ்க்கை தேவனுடைய கைகளில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? ஆமாம். இந்த உண்மையை விளங்கிக்கொள்ள நாம் ஒரு உவமையைப் பார்ப்போமா?  உங்கள் எல்லோருக்கும் பென்சில்கள் நன்றாக தெரியும்தானே? நாம் நாளாந்தம் பயன்படுத்தும் சாதாரணமான பென்சில்களையே கூறுகிறேன். ஆம், நாம் எல்லோரும் நமது பரம பிதாவின் கரங்களில் ஒரு பென்சிலைப் போல உள்ளோம் என்பதை அறிவோமாக.  பென்சில்கள் பல மூலப்பொருட்களின் சேர்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனுள் காரீயம், மரத்துண்டு, நிறப்பூச்சு எனப் பல்வேறுபட்ட பொருட்கள் காணப்படுகின்றன. இதே போலவே, நம்மையும் பிதாவின் கைகளில் உள்ள ஒரு பென்சில் என்பதாக நினைத்தோமானால், இந்த பென்சில்களின் பகுதிகள் போலவே நம்மையும் அறிந்துகொள்ளலாம்.  பென்சிலில் நாம் அறிந்துகொண்ட மூலப்பொருட்களுக்குள், காரீயம் என்பது நம்மைக்குறிக்கும். ஆனாலும், வெறும் காரீயத்தைக் கொண்டு அழகாக எழுத முடியுமா? இல்லையே. ஆகவே, அதனைச் சுற்றிக்  "கிருபை" என்ற மரத்துண்டை ஆண்டவர் அழகாக நம்மேல் போர்த்திருக்கிறார். ஆகவே, காரீயமும், காரீயத்தைச் சுற்றி இருக்கும் மரத்த