Skip to main content

Posts

Showing posts from May, 2021

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லியோ விக்கிர

அமெரிக்க மிஷனரி டேவிட் பிறேய்நாட் | American missionary - David Brainerd | (1718 -1747)

by  டேவிட் அண்ணா >>> David Brainerd  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஜீவித்திருந்த போதிலும் இன்றும் மங்கா புகழ் பெற்று விளங்குகிறார். காரணம் அவருக்கிருந்த ஆத்தும தாகம் அத்தனை விலையேறப்பெற்றது. எம்மையும் இன்று ஒரு கணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் வசதியான வாழ்க்கையை விட்டு எளிமையான செவ்விந்திய மக்களிடையே சென்று தேவனுடைய ஊழியத்தைச் செய்தார். 1718, ஏப்ரல் மாதம் 20ம் திகதி அமெரிக்காவிலுள்ள ‘ Haddam ’ என்ற ஊரில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையாரை இழந்தார். பின்னர்; பதினான்காம் வயதில் தனது தாயாரை இழந்து அனாதையாக விடப்பட்டார். அதனால் சிறுவயது முதல் சோக மனப்பான்மை உடையவராகக் காணப்பட்டார். பாவத்தைக் குறித்த பயம் இல்லாவிட்டாலும் தன் சரீர பெலவீனத்தினிமித்தம் மரணத்தைக் குறித்த பயம் இவரிடம் காணப்பட்டது. கெட்ட வாலிபருடைய சகவாசத்தை விரும்பாவிட்டாலும் களியாட்டுக்கள் அவருக்கு அதிக பிரியமாயிருந்தது. எவ்வளவு ஆவலுடன் அங்கு செல்வாரோ, அதே ஆவலோடு திரும்பாமல் மனச்சாட்சியில் கறை படிந்தவராய் வேதனையோடு வீடு திரும்புவார். 1737ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘ட்ரம்