Skip to main content

இயேசுவின் சீஷரில் இயேசுவின் சாயல் | BIBLE STUDY


by பிறேமன் அண்ணா

>>>


என் அன்பின் தம்பி தங்கைமாரே,

இயேசு  சுவாமியின் நல்ல சீஷர்களாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிற நம் ஒவ்வொருவரிலும் இயேசு சுவாமியின் சாயல் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம். இயேசுவின் சீஷர் என எம்மை அர்ப்பணிக்கும்போது , நம்மில் உண்மையாகவே இயேசு சுவாமியைப் போன்ற குணநலன்களும் வாழ்க்கைமுறையும் இருக்கின்றதா என்பதை நாம் சிந்தித்துக்கொள்ளவேண்டும். இயேசு சுவாமியின் சாயல் எம்மில் உள்ளதா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம்? சிந்திப்போமா? 

நம் ஆண்டவராகிய தேவன் நம்மை சிருஷ்டித்து உருவாக்கியபோது, நம்மைத் தமது சாயலாக உருவாக்கினார். ஆதியாகமம் 1: 26 ல், "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" என்று சொல்லியிருப்பதை நாம் வாசிக்கிறோம். அப்படியானால், நம்மை மனுஷராய் படைத்தபோதே தமது சாயலையும் தமது ரூபத்தையும் நம்மில் ஆண்டவர் வைத்திருக்கிறார். தமது குணாதிசயங்கள், தமது எண்ணங்கள் தமது உணர்வுகள், தமது விருப்பங்கள் என அவருடைய சாயலை நம்மிலே பதிந்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாது, நம்மைப் படைத்தபோது தமது ரூபத்தின்படியேயும் நமது உடலை ஆண்டவர் உருவாக்கினார் என வேதம் சொல்லுகிறது. ஆகையால், இன்றைக்கு உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடியிலோ அல்லது உங்கள் Phone இலுள்ள Selfie கேமராவிலோ உங்களை நீங்கள் பார்க்கும்போது, "நான் தேவனுடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியேயும் படைக்கப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லவேண்டும். 

ஆகையால், தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் பெற்று, நமது இயேசுசுவாமியின் சீஷராய் வாழ விரும்புகிற நாம் ஒவ்வொருவரும் இந்த மகிமையான தன்மையை எம்மில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இயேசு சுவாமி எப்படியாக பாவத்துக்கு தன்னுடைய வாழ்வில் இடம்கொடாமல், பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டினாரோ, அதேபோலவே நாங்களும் வாழ எத்தனிக்கவேண்டும். எம்முடைய வாழ்வும் இயேசுவைப்போல பரிசுத்தமாய் இருக்கவேண்டும். இயேசு சுவாமி எப்படியாக எல்லோரிடத்திலும் தமது அன்பையும் ஆதரவையும் மனதார கொடுத்துவந்தாரோ, அது போலவே எமது வாழ்வும் இருக்கவேண்டும். பிறர்மீது அன்பு வைத்து அவர்களை ஆதரித்து, ஏன் சில நேரங்களில், நம்மை இழந்தும் மற்றவர்களுக்காக நாம் வாழவேண்டும். அதுவே உண்மையான இயேசுவின் சீஷரில் நாம் காணும் இயேசுவின் சாயல். இப்படியாக வாழ்வதே நமது அழைப்பு.

ஆகையால், இன்றைக்கு எங்களையே நாங்கள் சிந்தித்துப் பார்ப்போம். இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்புகிற எம்மில் இயேசுசுவாமியின் எண்ணங்கள், விருப்பங்கள், குணாதிசயங்கள், உணர்வுகள் இருக்கின்றனவா என சிந்தித்துப் பார்ப்போம். வரும் நாட்களில் இந்த குணாதிசயங்களைப் பற்றி மென்மேலும் உங்களோடு பேச காத்திருக்கிறேன். 

ஆண்டவர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் தமது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலைத் தந்து தமது உண்மையான சீஷராய் வாழ உதவி செய்வாராக.



"இன்னும் இன்னும் உம் அன்பை அறியணுமே..."





Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...