Skip to main content

Posts

Showing posts with the label Sahayanathan

பரம பிதாவின் கைகளில் பென்சில்கள் நாங்கள் | GEM STONES

by  டேவிட் அண்ணா >>> அன்புள்ள தம்பி தங்கைமாரே, நம்முடைய வாழ்க்கை தேவனுடைய கைகளில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? ஆமாம். இந்த உண்மையை விளங்கிக்கொள்ள நாம் ஒரு உவமையைப் பார்ப்போமா?  உங்கள் எல்லோருக்கும் பென்சில்கள் நன்றாக தெரியும்தானே? நாம் நாளாந்தம் பயன்படுத்தும் சாதாரணமான பென்சில்களையே கூறுகிறேன். ஆம், நாம் எல்லோரும் நமது பரம பிதாவின் கரங்களில் ஒரு பென்சிலைப் போல உள்ளோம் என்பதை அறிவோமாக.  பென்சில்கள் பல மூலப்பொருட்களின் சேர்க்கையினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனுள் காரீயம், மரத்துண்டு, நிறப்பூச்சு எனப் பல்வேறுபட்ட பொருட்கள் காணப்படுகின்றன. இதே போலவே, நம்மையும் பிதாவின் கைகளில் உள்ள ஒரு பென்சில் என்பதாக நினைத்தோமானால், இந்த பென்சில்களின் பகுதிகள் போலவே நம்மையும் அறிந்துகொள்ளலாம்.  பென்சிலில் நாம் அறிந்துகொண்ட மூலப்பொருட்களுக்குள், காரீயம் என்பது நம்மைக்குறிக்கும். ஆனாலும், வெறும் காரீயத்தைக் கொண்டு அழகாக எழுத முடியுமா? இல்லையே. ஆகவே, அதனைச் சுற்றிக்  "கிருபை" என்ற மரத்துண்டை ஆண்டவர் அழகாக நம்மேல் போர்த்திருக்கிறார். ஆகவே, காரீயமும், காரீயத்தைச் சுற...

ஜோர்ஜ் வில்லியம்ஸ் - George Williams | FOOTPRINTS OF MISSIONARIES

by  டேவிட் அண்ணா >>> "அவருடைய (ஆண்டவருடைய) மேன்மைக்கு என்னுடைய முழுமை" "My Utmost for His (God's) Highest" உலகில் இதுவரை எண்ணற்ற நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு குறிக்கோ ள்கள் உண்டு. ஆனால், இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், மனிதருக்கு வளத்தையும் உலகிற்கு முன்னேற்றத்தையும் அளிக்கின்றன. ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு ம னதோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக’ என்ற இவ் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு 1844 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே அகில உலக கிறிஸ்தவ இளைஞர் இயக்கமாகும் (Y.M.C.A).  ஜோர்ஜ் வில்லியம்ஸ் - George Williams (1821-1905) ஜோர்ஜ் வில்லியம்ஸ், இளம் வயதிலேயே மிகவும் சுறு சுறுப்பும் ஆர்வமும் நிறைந்தவராக கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டவர். கிறிஸ்தவ இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் காணப்பட்டது. தன் விருப்பத்தை ஜெபத்தின் மூலமாக ஆண்டவருக்கு தெரியப்படுத்தினார். அவரின் ஜெபம் கேட்கப்பட்டது. மே 6, 1844ஆம் ஆண்டு லண்டன் ...