Skip to main content

Posts

Showing posts from July, 2020

FOOTPRINTS க்கு பின்னாக ஒளிந்திருக்கும் ஒரு ஆச்சரியத்தின் கதை | GEM STONES

by  பிறேமன் அண்ணா >>> அன்புள்ள தங்கை தம்பிமாரே,  இன்று நான் உங்களுடன் ஒரு அழகான, பிரபலமான சித்திரம் பற்றியும், அதற்குப் பின்னாக இருக்கும் கதை பற்றியும் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.  உங்களில் எத்தனை பேர் மேலே காணப்படும் "FOOTPRINTS/கால்சுவடுகள்" என்ற படத்தை/சித்திரத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்கள்? அதிகமாக, நமது இல்லங்களில் இந்தப் படமானது ஒரு ஆங்கில கவிதையோடு (English Poem) சேர்த்து அச்சிடப்பட்டு சுவர்களில் மாட்டப்பட்டு இருப்பதை காணமுடியும்.  ஆனாலும், எப்போதாவது இந்த படத்தின் அர்த்தம் என்ன, இதை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இல்லங்களின் சுவர்களிலே மாட்டிவைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? அப்படி என்ன விசேஷம் உண்டு என அறிந்துகொள்ளுவோமா? இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்பும் நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் படத்திலே ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது. 1964ம்  ஆண்டு எழுதப்பட்டிருக்கக்கூடும் என கருதப்படும் இந்த ஆங்கில கவிதை யாரால் எழுத்தப்பட்டது என்பது இன்றைக்குவரைக்கும் ஒரு கேள்வியான விடயமே. அதிகப்படியான ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கவிதை மார்கிரெட் பவேர்ஸ் (Ma

நம்மைத் தமது சீஷராய் அழைக்கும் இயேசு சுவாமி | BIBLE STUDY

by  பிறேமன் அண்ணா >>> அன்பின் தம்பி தங்கைமாரே,  இயேசு சுவாமி எம் ஒவ்வொருவரையும் தம்முடைய  சீஷர்களாய் அழைத்திருக்கிறார், தெரியுமா? தமது உண்மையுள்ள சீஷர்களாய் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். ஆனாலும், இன்றைக்கு நான் உங்களிடம் ஒரு குட்டிக் கேள்வி கேட்க விரும்புகிறேன். இயேசுவின் விசுவாசிகளாக  வாழ்வதற்கும், இயேசுவின் சீஷராய் வாழ்வதற்கும் இடையே என்ன வித்தியாசம்? சிந்திக்கத் தோணுகிறதல்லவா? சிந்திப்போமா?  இயேசுவின் நாமத்திலே நம்பிக்கை வைத்து, அவரையே தங்கள் வாழ்வின் வழியாய், கடவுள் எம்மீது வைத்த அன்பின் வெளிப்பாடாய் இயேசுவைக்  கண்டு, அவரின் நாமத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற எல்லோருமே அவருடைய விசுவாசிகளே. ஆனாலும், இயேசுவின் சீஷராய் வாழ்வதென்பது இவற்றையும் தாண்டிச் செய்யும் ஒரு காரியமே.  சாதாரணமாக இந்த உலகில், சீஷர் என்றால் யார் என்று கேட்கும்போது, ஒரு குருவிடம் பயின்று, அவர் வழியைப் பின்தொடர்ந்து, அவரையே தங்கள் உதாரணமாய் வைத்து வாழ்பவர்களே என்று யாரும் சொல்லக்கூடும். அப்படியாயின், நாம் இயேசுவின் சீஷராய் இருப்பதுவும் அதுதானா? அல்லது இவற்றிற்கும் மேலாக ஏதுமுண்டா? இவற்றிக்க

நம்மைத் தெரிந்துகொண்ட இயேசு சுவாமி | GEM STONES

by  பிறேமன் அண்ணா >>> 2011ம்  ஆண்டு, நான் இந்தியாவின் பெங்களூரிலே பல்கலைக்கழக மாணவனாய் இருந்த காலம். ஒரு நாள், அழகான குளிர்ச்சியான அதிகாலை நேரம் அது. எனது சில நண்பர்களோடு சேர்ந்து பெங்களூரு நகரத்துக்கு அப்பாலே இருக்கும் "நந்தி மலை" என அழைக்கப்படும் மலையின் உச்சியை அடைவதற்காக சில மோட்டார் சைக்கிள்களில் சேர்ந்து புறப்பட்டோம்.  எமது நோக்கமெல்லாம், சூரியன் உதிப்பதற்கு முன்னரே நாம் அந்த மலை உச்சியை அடைந்துவிடவேண்டும் என்பதே. திரண்டிருக்கும் அதிகாலை மேகக்கூட்டங்களுக்கு மேல் உள்ள அந்த மலையுச்சியிலிருந்து சூரியன் உதிப்பதைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியென்று கேள்விப்பட்டிருந்தோம். ஆகையால் எங்கள் மோட்டார் சைக்கிள்கள் விரைந்தே சென்றுகொண்டிருந்தன.  இப்படியாக நாங்கள் விரைந்து சென்ற வழியிலே, நகரத்தின் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். எமது மோட்டார் சைக்கிள்கள் சென்ற அந்த பாதைகள்  என் கவனத்தை ஈர்த்தது. திடீரென்று எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நாங்கள் பெங்களூரு நகரத்தை விட்டு வெளியேறும் வரையும் அந்த அதிகாலைக் குளிர்ச்சியிலே அநேக வணக்க ஸ்தலங்களை நான் அவதானித்தேன். நாங்கள்

Welcome to இளையசீஷர்