Skip to main content

Posts

Showing posts from March, 2021

விசுவாச அப்போஸ்தலன் - ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859-1947)

by  டேவிட் அண்ணா >>> “GREAT FAITH IS THE PRODUCT OF GREAT FIGHTS” -SMITH WIGGLESWORTH- நம் அருள் நாதர் இயேசுகிறிஸ்து, தாம் உலகத்திலிருந்த நாட்களிலே, மரித்தோரை உயிரோடெழுப்பினார் அத்துடன் தானும் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில்; உயிரோடெழுந்தார். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, எலியாவும், எலிசாவும் மரித்துப்போன சிறுவர்களை உயிரோடெழுப்பினார்கள். புதிய ஏற்பாட்டிலே ஆதி அப்போஸ்தலர்களான பேதுருவும், பவுலும் மரித்தோரை உயிரோடெழுப்பினார்கள் என வேதாகமம் கூறுகிறது. மரித்தோர் எழுப்பப்படுவதெல்லாம் வேதாகம காலத்தோடு முடிந்துவிட்டதா? இக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எழுந்தவர்தான் “விசுவாச அப்போஸ்தலன்” என்றழைக்கப்படும் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த். இவர் கி.பி.1859-ஆம் வருஷம் ஜூன் மாதம் 8ம் திகதி, இங்கிலாந்து தேசத்திலுள்ள மென்ஸ்டன் என்ற சிறிய கிராமத்திலே ஜோன் விக்கிள்ஸ்வொர்த் - மார்த்தா தம்பதியினருக்கு பிறந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த திருச்சபையை அனல் மூட்டி, அக்கினியாய் பற்றி எரியவைக்கப் போகிறவன் அந்தக் குழந்தை என்று அந்த எளிமையான பெற்றோருக்கு அப்போது தெரியாது.

ஓசன்னாவும் நமது வாழ்வும்

by  பிறேமன் அண்ணா >>> முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்:  தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். (மத்தேயு 21: 09) குருத்தோலை ஞாயிறு நம் ஒவ்வொருவருக்கும் சிறு வயது தொடக்கம் நன்கே அறிந்த ஒரு நாளாயிருக்கிறது. இந்த நாளிலே இயேசு சுவாமி எருசலேமுக்குள் பவனியாக ஒரு கழுதைக்குட்டியின்மேல் அமர்ந்திருந்து வந்ததும், அப்பட்டணத்தின் மக்களால் " தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா" என்று  வாழ்த்தி வரவேற்கப்பட்டதும் நமக்கு நன்கு அறிந்தவையாகும்.  குருத்தோலைகளும் பவனியும் ஓசன்னா என்ற சத்தமும் நமக்கு மிகவும் பழக்கமானதாகவும், நன்கு அறிந்ததாகவும் இருந்தாலும் இந்த ஓசன்னா என்பது நமது விசுவாச வாழ்வில் ஒரு முக்கியமானதாக இருக்கிறது.  ஓசன்னா என்ற வார்த்தை, நவீன உலகில், ஒருவரை மகிமைப்படுத்தவோ அல்லது ஒரு நபர் மீது நமக்கு இருக்கும் மிகையான பாராட்டை தெரிவிக்கும் ஒரு வார்த்தையாகவோ அமைந்தாலும், இதன் ஆரம்பம் எபிரேய மற்றும்

“கடவுள் அது நல்லது என்று கண்டார் ” | GOSPEL ART GALLERY

by  வதனி அக்கா   >>>  

பர்மாவின் அப்போஸ்தலன் - அடோனிராம் ஜட்சன் (பாகம்-2) | FOOTPRINTS OF MISSIONARIES

  by  டேவிட் அண்ணா >>> (சென்ற வார கட்டுரையின் தொடர்ச்சி…….) அந்நாட்களில் பர்மாவில் ஒரு மிஷனரி கூட இல்லை. எரிகிற வெயிலிலும் புழுதி நிறைந்த ‘ரங்கூன்;’ நகரத்திலும் சோர்வை உண்டாக்கும் சேறு நிறைந்த தெருக்களிலும் ஊழியம் செய்தனர் ஜட்சன் தம்பதியினர். புத்த மதத்தை அதிகமாகப் பின்பற்றிய பர்மிய மக்கள் மத்தியில் சாதி வேறுபாடில்லை. ஆனால் பர்மிய அரசன் பர்மாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனினதும் உள்ளத்தை சொந்தமாக்கி அவர்களை அடிமையாக நடத்திவந்தான். எந்த பர்மிய அரசனும் வேறுமதம் அங்கு பரவுவதை அனுமதிக்கவில்லை. நித்திய கடவுளைக் குறித்த நம்பிக்கையே அவர்களுக்கு கிடையாது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலேயே இவர்களது ஊழியம் ஆரம்பித்தது. அந்நாட்களில் பர்மாவிலுள்ள ரங்கூன்  ( Rangoon )  பட்டணத்தில் கொடுங்கோல் ஆட்சியில் ஆர்வம் கொண்ட ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவ்வரசனின் ஒவ்வொரு விருப்பமும் நாட்டின் சட்டமாக மாறியது. அரசனும் மக்களும் ‘நாட்டின் மதம் புத்த மதம்’ என கருதி வந்தனர். அம் மதத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் குற்றம் புரிந்தவர்களாக கருதப்பட்டு, மரணதண்டனைக்கு ஆளானார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு பணிபுரிய ஆரம்பி

இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது | GOSPEL ART GALLERY

by  வதனி அக்கா   >>>  

குறுக்கெழுத்துப் புதிர் - 10 | CROSSWORDS - 10 | லூக்கா 17 - 24

  by  ஷப்னிகா    அக்கா >>>  குறுக்கெழுத்துப் புதிர் -  10   லூக்கா 17 - 24 குறுக்கெழுத்துப் புதிர் -  10  க்கான விடைகள்  27.03.2021  அன்று   விடைகள்  | ANSWERS பக்கத்தில் வெளியிடப்படும்.

பர்மாவின் அப்போஸ்தலன் அடோனிராம் ஜட்சன் | ADONIRAM JUDSON | FOOTPRINTS OF MISSIONARIES

by  டேவிட் அண்ணா >>> “There is no success without sacrifice. If you succeed without sacrifice, it is because someone has suffered before you; If you sacrifice without success it is because someone will succeed after.” -           ADONIRAM JUDSON    -   வணக்கம் நண்பர்களே,  நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் மனதில் சமாதானமும் உண்டாவதாக. என்ன, எல்லாரும் நல்லா இருக்கின்றீர்களா? கடந்த வாரம் இந்தியா தேசத்திற்கு கிறிஸ்துவை அறிவித்த உன்னத சீடரான தோமாவைக் குறித்து கற்றோம். இன்று, இந்தியாவிற்கு அருகாமையில் இருக்கும் மியன்மார்(பர்மா) தேசத்திற்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்த கிறிஸ்தவ மிஷனரியான அடோனிராம் ஜட்சன் பற்றி கற்கவுள்ளோம். நீங்கள் கற்க ஆயத்தமா? வாருங்கள், அம் மிஷனரியின் அடிச்சுவடுகளை பின்பற்றிப் போவோம். ‘பொருள், புகழ், பட்டம், பதவி என்பவை வேண்டும் அத்துடன் நித்திய வாழ்வின் பேரின்ப மோட்சமும் வேண்டும், ஆனால் இயேசு கிறிஸ்து வேண்டாம்’ இதுதான் தற்காலத்தில் பெரும்பாலானோரின் போக்கு. 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க வாசியான அட

யெருபாகால் | GOSPEL ART GALLERY

by  வதனி அக்கா   >>>