Skip to main content

FOOTPRINTS க்கு பின்னாக ஒளிந்திருக்கும் ஒரு ஆச்சரியத்தின் கதை | GEM STONES


by பிறேமன் அண்ணா

>>>

அன்புள்ள தங்கை தம்பிமாரே, 

இன்று நான் உங்களுடன் ஒரு அழகான, பிரபலமான சித்திரம் பற்றியும், அதற்குப் பின்னாக இருக்கும் கதை பற்றியும் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.



 உங்களில் எத்தனை பேர் மேலே காணப்படும் "FOOTPRINTS/கால்சுவடுகள்" என்ற படத்தை/சித்திரத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்கள்? அதிகமாக, நமது இல்லங்களில் இந்தப் படமானது ஒரு ஆங்கில கவிதையோடு (English Poem) சேர்த்து அச்சிடப்பட்டு சுவர்களில் மாட்டப்பட்டு இருப்பதை காணமுடியும். 

ஆனாலும், எப்போதாவது இந்த படத்தின் அர்த்தம் என்ன, இதை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இல்லங்களின் சுவர்களிலே மாட்டிவைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? அப்படி என்ன விசேஷம் உண்டு என அறிந்துகொள்ளுவோமா? இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்பும் நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் படத்திலே ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது.


1964ம்  ஆண்டு எழுதப்பட்டிருக்கக்கூடும் என கருதப்படும் இந்த ஆங்கில கவிதை யாரால் எழுத்தப்பட்டது என்பது இன்றைக்குவரைக்கும் ஒரு கேள்வியான விடயமே. அதிகப்படியான ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கவிதை மார்கிரெட் பவேர்ஸ் (Margaret Powers) என்பவரால் எழுதப்பட்டது என்றே நம்புகின்றனர். ஆனாலும் நாம் இன்று கற்றுக்கொள்ள இருக்கும் கடவுளின் சத்தியம் யாருக்கூடாகவோ கொடுக்கப்பட்டது என்பதை நினைத்து நம் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம். இந்த "FOOTPRINTS-கால்சுவடுகள்" என்ற கவிதையே பின்னர் வெவ்வேறு ஓவியர்களால் ஓவியமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த கவிதையும் ஓவியங்களும் என்னத்தைச் சொல்லுகின்றன எனப் பார்ப்போமா? 

ஒரு நாள் ஒருவர் ஒரு கனவு கண்டாராம். அந்தக் கனவிலே, அவர் ஒரு கடற்கரை ஓரமாய் மணலின் மீது நடந்துகொண்டு சென்றாராம். அவர் நடந்துகொண்டு செல்லும்போது நிச்சயமாக அவருடைய கால்சுவடுகள் அந்த மெதுமையான மணலின் மேலே பதிந்திருக்கும் அல்லவா? ஆம். இப்பொழுது இந்த  நபர் நீண்ட தூரம்  மணலின்மேல் நடந்து முடித்துவிடவே, அவர் தான் கடந்து வந்த வழியைத் திரும்பிப் பார்த்தாராம். அப்பொழுது இரண்டுபேர் நடந்து வந்த காலடிகள் அவருக்குத் தெரிந்ததாம். "இதுவே நீ கடந்து வந்த வாழ்க்கைப் பாதை. உன்னோடு சேர்ந்து நானும் நடந்து வந்தேன்" என ஆண்டவர் உணர்த்தும் எண்ணம் இவருள் தோன்றியதாம். என்னவொரு மகிழ்ச்சி. "ஆ, என்னுடைய வாழ்க்கைப் பாதை முழுவதும் ஆண்டவரும் என்னோடு நடந்து வந்தாரா? எவ்வளவு ஆசீர்வாதம்!" என்று மனம் மகிழ்ந்தாராம். இப்படியாக மனம் மகிழ்ந்து அந்த கால்சுவடுகளை மணலின் மேல் உற்றுநோக்கிய அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். அது என்ன தெரியுமா?

அவர் தனது கடந்து வந்த வாழ்க்கையே இந்த மணலின் மேலுள்ள கால்சுவடுகள் என்று நினைத்து மகிழ்ந்து அதை உற்றுநோக்கியபோது, சில இடங்களிலே ஒருவருடைய கால்சுவடுகள் மாத்திரமே இருந்ததாம். "ஐயோ, ஆண்டவரும் நானும் வாழ்விலே தொடர்ந்து ஒன்றாக நடந்து வந்தோம் என்று நினைத்தேனே, ஆனால் சில இடங்களிலே ஒருவருடைய கால்சுவடுகள் மட்டுமே இருக்கின்றனவே?" என்று மனம் உடைந்தாராம். அது மட்டுமல்ல. இந்த ஒரு நபரின் கால்சுவடுகள் தெரிவதெல்லாம் எந்தக் காலங்கள் என ஞாபகப்படுத்திப் பார்த்ததும் அவருக்கு இன்னும் கவலை அதிகரித்ததாம். ஏனெனில், எப்போதெல்லாம் அவருடைய வாழ்விலே கஷ்டங்கள், கவலைகள், கண்ணீர்கள், தோல்விகள், பிறரின் வெறுப்புகள், அவமானங்கள், நோய்கள், மன உடைவுகள் வந்ததோ அப்போதெல்லாம் ஒரு நபரின் காலடிகள் மட்டுமே தெரிந்ததாம். மிகவும் மனம் உடைந்தாராம். எனக்கு கஷ்டம் வந்த நேரங்கள், தாழ்விலே இருந்த நேரத்திலெல்லாம் ஆண்டவர் என்னோடு வரவில்லையே, என்னை விட்டுத் தள்ளிப்போய்விட்டாரே என்று விரக்தியடைந்தாராம். என்ன செய்தார் தெரியுமா?

நேரே ஆண்டவரிடம் ஓடினாராம். விரக்தியுடன் ஆண்டவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம். "ஆண்டவரே, எப்போதெல்லாம் என்னுடைய வாழ்விலே கஷ்டங்கள், கவலைகள், கண்ணீர்கள், தோல்விகள், பிறரின் வெறுப்புகள், அவமானங்கள், நோய்கள், மன உடைவுகள் வந்ததோ அப்போதெல்லாம் ஒரு நபரின் காலடிகள் மட்டுமே தெரிகின்றன. நான் தனியாக நடந்திருக்கிறேன். ஏன் என்னை அந்த நேரங்களிலே தனியாக விட்டுச்சென்றீர்கள்? அந்த நேரங்களில் அல்லவா நீங்கள் எனக்காக என்னோடு இருந்திருக்கவேண்டும்?" என்று வேதனையோடு கேட்டாராம். அதற்கு ஆண்டவரின் பதில் என்ன தெரியுமா? 

அவருடைய வேதனை நிறைந்த கேள்வியைப் பார்த்து ஆண்டவர் ஒரு அமைதலான ஆறுதலான பதில் சொன்னாராம். "மகனே, உனக்கு எப்போதெல்லாம் வாழ்விலே கஷ்டங்கள், கவலைகள், கண்ணீர்கள், தோல்விகள், பிறரின் வெறுப்புகள், அவமானங்கள், நோய்கள், மன உடைவுகள் வந்ததோ அப்போதெல்லாம் ஒரு நபரின் காலடிகள் மட்டுமே தெரிவது உண்மையே. ஏனெனில், அந்த நேரங்களிலெல்லாம் தெரிவது உன்னுடைய கால்சுவடுகள் அல்ல, அவை என்னுடையவை. உனக்கு எப்போதெல்லாம் சந்தோசம், நிறைவு, களிப்பு, வெற்றி, அன்பின் உறவுகள், புகழ்ச்சி இருந்ததோ அப்போதெல்லாம் நான்  உன்னோடு கைப்பிடித்து நடந்தேன். ஆனால் நீ கஷ்டப்பட்ட நேரங்களில், நான் உன்னை நடக்க விடவில்லை. உன்னை நான் தூக்கிச் சுமந்துகொண்டு நடந்தேன்!" என்று விடையளித்தாராம். 

என் அன்பின் தம்பியே தங்கையே, இன்றைய நாளிலும் நீங்கள் இதை வாசிக்கும்போது உங்கள் கண்கள் கலங்கலாம். ஆண்டவரின் அன்பையும் அவருடைய அரவணைப்பையும் நினைத்து நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இதுவே உண்மை. உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிற ஆண்டவர் நம் இயேசு சுவாமி உண்மையுள்ளவர். ஒருபோதும் மாறாதவர். அவர் உங்களை என்றுமே காத்திடுவார். அவருக்கே உங்களுடைய வாழ்வை அர்ப்பணித்து அவருக்காகவே வாழ உங்களை ஒப்புவிப்பீர்களா? கர்த்தர் உங்களை  தேற்றி வழிநடத்துவார். 

அடுத்த முறை "FOOTPRINTS - கால்சுவடுகள்" படத்தைப் பார்க்கும்போதோ, அல்லது அந்த கவிதையைக் காணும்போதோ, இந்த ஆழமான சத்தியம் உங்களுக்கு ஞாபகம் வரட்டும். ஆண்டவர் தாமே உங்களை வழிநடத்துவாராக. 



Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...