Skip to main content

நம்மைத் தமது சீஷராய் அழைக்கும் இயேசு சுவாமி | BIBLE STUDY


by பிறேமன் அண்ணா

>>>




அன்பின் தம்பி தங்கைமாரே, 

இயேசு சுவாமி எம் ஒவ்வொருவரையும் தம்முடைய  சீஷர்களாய் அழைத்திருக்கிறார், தெரியுமா? தமது உண்மையுள்ள சீஷர்களாய் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். ஆனாலும், இன்றைக்கு நான் உங்களிடம் ஒரு குட்டிக் கேள்வி கேட்க விரும்புகிறேன். இயேசுவின் விசுவாசிகளாக  வாழ்வதற்கும், இயேசுவின் சீஷராய் வாழ்வதற்கும் இடையே என்ன வித்தியாசம்? சிந்திக்கத் தோணுகிறதல்லவா? சிந்திப்போமா? 

இயேசுவின் நாமத்திலே நம்பிக்கை வைத்து, அவரையே தங்கள் வாழ்வின் வழியாய், கடவுள் எம்மீது வைத்த அன்பின் வெளிப்பாடாய் இயேசுவைக்  கண்டு, அவரின் நாமத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற எல்லோருமே அவருடைய விசுவாசிகளே. ஆனாலும், இயேசுவின் சீஷராய் வாழ்வதென்பது இவற்றையும் தாண்டிச் செய்யும் ஒரு காரியமே. 

சாதாரணமாக இந்த உலகில், சீஷர் என்றால் யார் என்று கேட்கும்போது, ஒரு குருவிடம் பயின்று, அவர் வழியைப் பின்தொடர்ந்து, அவரையே தங்கள் உதாரணமாய் வைத்து வாழ்பவர்களே என்று யாரும் சொல்லக்கூடும். அப்படியாயின், நாம் இயேசுவின் சீஷராய் இருப்பதுவும் அதுதானா? அல்லது இவற்றிற்கும் மேலாக ஏதுமுண்டா? இவற்றிக்கு நாம் பதில் தேட விரும்புவதால், இயேசுவின் சீஷர் என்றால் யார், அவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் விஷேட குணாதிசயங்கள் எவை என்பதை சிந்தித்துப் பார்க்கலாம். 

நாம் வாழும் இந்த உலகில், அநேகர் அநேக விதமான தேவைகளோடு, பாரங்களோடு, கஷ்டங்களோடு வாழுவதை நாம் அறிந்திருக்கிறோம். இவற்றின் மத்தியிலே இருக்கும் மிகப்பெரிய பாரம் தான் குற்ற உணர்வு. நாம் பிழையான காரியங்கள் செய்யும்போது, விஷேடமாக மற்றவர்களை நோகப்பண்ணும், பாதிக்கும், காயப்படுத்தும் அளவுக்கு நாம் ஏதும் செய்து, நமது பிழையை நாம் பின்னர் உணரும்போது வேதனைப்படுகிறோம். "ஐயோ, நான் அப்படி செய்திருக்கக் கூடாதே" என்று நினைத்து கலங்குகிறோம். நமக்குள்ளே குற்ற உணர்வு பெருக ஆரம்பிக்கும். இப்படியாக கடவுளுக்கு அருவருப்பான , பிறருக்கு வேதனையளிக்கும் காரியங்களை நாம் செய்வதையே "பாவம்" என்று சொல்லுகிறோம். ஆகையால் பாவம் செய்த ஒருவருக்கு, தன் பாவத்தை உணரும்போது வரும் உணர்வே "பாவசஞ்சலம்" அல்லது "குற்றவுணர்வு" என்று நாம் அழைக்கிறோம். இந்த உணர்வு ஒரு நாலு பக்கமும் கம்பியால் அடைத்த சின்ன சிறைக்கூண்டுக்குள் இருப்பதைப் போல ஒரு உணர்வைத் தரும். இந்த குற்ற உணர்வை மனதிலே பாரமாய் தூக்கிக்கொண்டு உலகில் அநேகர் அலைந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். 

"யார் நம்மை இந்த பாவசஞ்சலம் என்ற கூட்டிலிருந்து விடுவிப்பார்கள்? யார் உதவி செய்வார்கள்? இந்தக் குற்ற உணர்விலிருந்து நான் எப்படி விடுபடலாம்?" என்று கோடிக்கணக்கானோர் இந்த பூமியில் வேதனையோடு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இயேசுவின் அன்பைக் காட்டி, "நீ பயப்படாதே, உனக்காக, உன்னுடைய இடத்தில் இயேசு சுவாமி மரித்தார். உன்னுடைய குற்றங்களை அவர் சிலுவையில் சுமந்தார். இன்றும் உயிரோடெழுந்து உனக்கு வாழ்வு தருவதற்காய் அவர் நம்மிடையே வாழ்கிறார்" என்ற நல்ல செய்தியைச் (நற்செய்தி) சொல்லுவது மட்டுமில்லாது, இப்படியாக கஷ்டப்படும் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்தும் சேவை செய்வதே இயேசுவின் சீஷரின் முதல் நோக்கம். 

ஆகையால், இயேசுவின் சீஷராய் வாழ விரும்பும் ஒருவருக்கு முதலாவது, இயேசு சுவாமியைப்போல் இந்த உலகில் இருப்பவர்களை நேசிக்கும், அன்பு காட்டும், அவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்யும் மனது இருக்க வேண்டும். அதுவே மிகமுக்கியம். இயேசுவின் சாயல், இயேசுவின் அன்பு, இயேசுவின் இரக்கம், இயேசுவின் மன்னிக்கும் உள்ளம், இயேசுவின் பணி செய்யும் எண்ணம் நமக்குள் வளர வேண்டும். அப்படி நடக்கும்போதே நாம் அவருடைய சீஷராய் மாற, இந்த உலகில் இயேசுவுக்கு சாட்சிகளாய் வாழ முடியும். 

இயேசுவின் சீஷரின் குணாதிசயங்கள் இன்னும் அநேகம் உண்டு. தொடர்ந்து வரும் நாட்களிலே நான் ஒவ்வொன்றாய் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாம் ஒவ்வொன்றாக வரும் நாட்களிலே கற்கப்போகிறோம்.

இன்றைக்கு ஆண்டவர் இயேசு சுவாமி உங்களையும் தன்னுடைய சீஷரில் ஒருவராய் அழைத்திருக்கிறபடியால் அவரிடம் ஜெபிப்பீர்களா? "இயேசு சுவாமி நான் உம்முடைய சீஷரில் ஒருவராய் உமக்காய் வாழ, உமக்காய்ப் பணி செய்ய விரும்புகிறேன். நீர் என்னை அழைக்கிறீர் என்று அறிகிறேன். இன்றைய நாளிலும் என்னை உம்மைப்போல் மாற்றும் ஆண்டவரே. உம்முடைய சாயல், உமது அன்பு, உமது இரக்கம், உமது  மன்னிக்கும் உள்ளம், உம்மைப்போல் பணி செய்யும் எண்ணம் என்பவற்றை என்னில் நிரம்பவே தந்து ஆசீர்வதியும்" என்று கேட்போமா?







Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...