Skip to main content

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

 

by டேவிட் அண்ணா

>>>

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்;

(1848 1915)

மேரி ஸ்லேசர் 1848ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு, கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார்.

ஆப்பிரிக்கா கண்டம், டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில், அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.  

கலபார் நதி, இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ, ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன.

அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே, கொடூரன் ஒருவனின் கை, மூர்க்கமாய் பாய்ந்தது அக்குழந்தைகள் மீது. பிஞ்சு வாய் திறந்து அக்குழந்தைகள் அழும் முன்னே, அவைகளின் தலைகளை துண்டித்து எறிந்தான் அக் கொடூரன். சோகத்தின்மேல் சோகம் மீண்டும் தொடர்ந்தது. அழுவதற்குக் கூட கண்ணீரற்ற அக்குழந்தைகளின் தாயானவள் வீட்டை விட்டு காட்டிற்கு விரட்டப்பட்டாள். தனிமையில் அவள் வேதனைப்பட்டாள்.

காரணம்…? இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவை தீயசக்திகள் மூலம் பிறந்தவை’ என்பது அவர்களின் நம்பிக்கை. என்ன அறியாமை அது?

இதனைக் கேள்வியுற்ற மேரி ஸ்லேசரின் கண்கள் சிவந்தன. ‘நான் அங்கு போய் அதை நிறுத்தாவிடில் அங்கே இன்னும் அதிக இரத்தம் சிந்தப்பட்டு அநேகர் கொல்லப்படக்கூடும்’ என்று கூறிக்கொண்டு, யுத்தவீரனைப் போல உள்ளத்தில் வீறுகொண்டு எழுந்தார். கிறிஸ்துவின் அன்பு அவரை உந்தித்தள்ள, கிராமமெங்கும் வீடு வீடாய்ச் சென்று உண்மைச் செய்தியை உற்சாகமாய் எடுத்துரைத்தாள். பேச்சிலே மாத்திரமல்ல தன் செயலிலும் கிறிஸ்து இயேசுவின் அன்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார். கடவுள் இவரோடு கூட இருந்து மனவலிமையை அளித்தபடியால் இவர் எதற்கும் அஞ்சாது இறைபணியை செய்தார். ;மக்களின் அறிவுக் கண்களை திறந்தார். அவர்களது அறியாமையைப் போக்கினார். இதனால் இரட்டைக் குழந்தைகளெல்லோரும் காப்பாற்றப்பட்டனர். முழுக்கிராமமுமே இதனால் களிகூர்ந்தது.

ஆப்பிரிக்காவின் வெள்ளை ராணி ‘மா’ என்று  அங்குள்ள மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மேரி ஸ்லேசர் 1915ம் வருடம் ஜனவரி பதின்மூன்றாம் திகதியன்று, தான் காப்பாற்றிய இரட்டைக் குழந்தைகள் சூழ்ந்திருக்க இறைவன் பாதம் சரணடைந்தார்.

நண்பர்களே, இன்று நாம் வாழும் சமூகத்திலும்; காணப்படும் அறியாமை என்னும் இருளை அகற்ற, மேரியை போன்று நீங்களும் முன்வருவீர்களா?

ஜெபம் : அன்பான ஆண்டவரே, கனிவுள்ள கண்களை எனக்குத் தாரும். அறியாமை என்னும் இருளை அகற்றி, மக்களை உம் வெளிச்சத்தின் அண்டைக்கு கொண்டுவர எனக்கு ஆற்றல் தாரும். இயேசுவின் பெயரினால் உம்மிடம் தாழ்மையோடு கேட்கிறேன். ஆமென்.

அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.’ (அப்போஸ்தலர் 17:30)



                                                            



Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...