Skip to main content

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

 

by டேவிட் அண்ணா

>>>

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்;

(1848 1915)

மேரி ஸ்லேசர் 1848ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு, கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார்.

ஆப்பிரிக்கா கண்டம், டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில், அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.  

கலபார் நதி, இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ, ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன.

அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே, கொடூரன் ஒருவனின் கை, மூர்க்கமாய் பாய்ந்தது அக்குழந்தைகள் மீது. பிஞ்சு வாய் திறந்து அக்குழந்தைகள் அழும் முன்னே, அவைகளின் தலைகளை துண்டித்து எறிந்தான் அக் கொடூரன். சோகத்தின்மேல் சோகம் மீண்டும் தொடர்ந்தது. அழுவதற்குக் கூட கண்ணீரற்ற அக்குழந்தைகளின் தாயானவள் வீட்டை விட்டு காட்டிற்கு விரட்டப்பட்டாள். தனிமையில் அவள் வேதனைப்பட்டாள்.

காரணம்…? இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவை தீயசக்திகள் மூலம் பிறந்தவை’ என்பது அவர்களின் நம்பிக்கை. என்ன அறியாமை அது?

இதனைக் கேள்வியுற்ற மேரி ஸ்லேசரின் கண்கள் சிவந்தன. ‘நான் அங்கு போய் அதை நிறுத்தாவிடில் அங்கே இன்னும் அதிக இரத்தம் சிந்தப்பட்டு அநேகர் கொல்லப்படக்கூடும்’ என்று கூறிக்கொண்டு, யுத்தவீரனைப் போல உள்ளத்தில் வீறுகொண்டு எழுந்தார். கிறிஸ்துவின் அன்பு அவரை உந்தித்தள்ள, கிராமமெங்கும் வீடு வீடாய்ச் சென்று உண்மைச் செய்தியை உற்சாகமாய் எடுத்துரைத்தாள். பேச்சிலே மாத்திரமல்ல தன் செயலிலும் கிறிஸ்து இயேசுவின் அன்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார். கடவுள் இவரோடு கூட இருந்து மனவலிமையை அளித்தபடியால் இவர் எதற்கும் அஞ்சாது இறைபணியை செய்தார். ;மக்களின் அறிவுக் கண்களை திறந்தார். அவர்களது அறியாமையைப் போக்கினார். இதனால் இரட்டைக் குழந்தைகளெல்லோரும் காப்பாற்றப்பட்டனர். முழுக்கிராமமுமே இதனால் களிகூர்ந்தது.

ஆப்பிரிக்காவின் வெள்ளை ராணி ‘மா’ என்று  அங்குள்ள மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மேரி ஸ்லேசர் 1915ம் வருடம் ஜனவரி பதின்மூன்றாம் திகதியன்று, தான் காப்பாற்றிய இரட்டைக் குழந்தைகள் சூழ்ந்திருக்க இறைவன் பாதம் சரணடைந்தார்.

நண்பர்களே, இன்று நாம் வாழும் சமூகத்திலும்; காணப்படும் அறியாமை என்னும் இருளை அகற்ற, மேரியை போன்று நீங்களும் முன்வருவீர்களா?

ஜெபம் : அன்பான ஆண்டவரே, கனிவுள்ள கண்களை எனக்குத் தாரும். அறியாமை என்னும் இருளை அகற்றி, மக்களை உம் வெளிச்சத்தின் அண்டைக்கு கொண்டுவர எனக்கு ஆற்றல் தாரும். இயேசுவின் பெயரினால் உம்மிடம் தாழ்மையோடு கேட்கிறேன். ஆமென்.

அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.’ (அப்போஸ்தலர் 17:30)



                                                            



Comments

Popular posts from this blog

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>