Skip to main content

ஜோர்ஜ் வில்லியம்ஸ் - George Williams | FOOTPRINTS OF MISSIONARIES


by டேவிட் அண்ணா

>>>

"அவருடைய (ஆண்டவருடைய) மேன்மைக்கு என்னுடைய முழுமை"

"My Utmost for His (God's) Highest"

உலகில் இதுவரை எண்ணற்ற நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு குறிக்கோள்கள் உண்டு. ஆனால், இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், மனிதருக்கு வளத்தையும் உலகிற்கு முன்னேற்றத்தையும் அளிக்கின்றன.

‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு மனதோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக’ என்ற இவ் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு 1844 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே அகில உலக கிறிஸ்தவ இளைஞர் இயக்கமாகும் (Y.M.C.A). 

ஜோர்ஜ் வில்லியம்ஸ் - George Williams (1821-1905)
ஜோர்ஜ் வில்லியம்ஸ் - George Williams (1821-1905)

ஜோர்ஜ் வில்லியம்ஸ், இளம் வயதிலேயே மிகவும் சுறுசுறுப்பும் ஆர்வமும் நிறைந்தவராக கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டவர். கிறிஸ்தவ இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் காணப்பட்டது. தன் விருப்பத்தை ஜெபத்தின் மூலமாக ஆண்டவருக்கு தெரியப்படுத்தினார். அவரின் ஜெபம் கேட்கப்பட்டது.

மே 6, 1844ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் மிகுந்த ஜெபத்துடன் Y.M.C.A என்ற அமைப்பை உருவாக்கினார். உலகத்தின் எல்லா பகுதிகளிலுமுள்ள கிறிஸ்தவ இளைஞர்களை இயேசு கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தி, அவரை தங்கள் சொந்த மீட்பராகவும், கடவுளாகவும் ஏற்றுக்கொண்டு, அவரின் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த தம்மை அர்ப்பணித்து ஒன்றுபட்டு உழைக்கச் செய்யவைப்பதே இச் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

1855ஆம் வருடம், இது பன்னாட்டு சங்கமாக உயர்வு பெற்று, இன்று சுமார் 150 நாடுகளில், கிளை சங்கங்களை ஆரம்பித்து, சிறப்புடன் செயற்பட்டு வருகின்றது. மனிதனின் உடல், உள்ளம், ஆவி ஆகிய மூன்றும் ஒன்றாக முழுமையடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. உலக அமைதி, உலக சமத்துவம், சமூக நீதி போன்றவை வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இச் சிறந்த நிறுவனத்தை ஆரம்பித்த வில்லியம்ஸ் இளைஞர்களின் வழிகாட்டியாக இவ்வுலகில் வாழ்ந்து காட்டினார்.

அன்பின் தம்பியே தங்கையே! 

உமது பணியினால் யாருடைய வாழ்வு மேம்படுகிறது?

‘அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக!’ (பிலிப்பியர் 2:4)

‘ஆத்துமாக்களை (கிறிஸ்துவுக்காக) ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்;’ (நீதி.11:30)

***


வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 



Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...