Skip to main content

ஓசன்னாவும் நமது வாழ்வும்



by பிறேமன் அண்ணா
>>>

முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்:  தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
(மத்தேயு 21: 09)

குருத்தோலை ஞாயிறு நம் ஒவ்வொருவருக்கும் சிறு வயது தொடக்கம் நன்கே அறிந்த ஒரு நாளாயிருக்கிறது. இந்த நாளிலே இயேசு சுவாமி எருசலேமுக்குள் பவனியாக ஒரு கழுதைக்குட்டியின்மேல் அமர்ந்திருந்து வந்ததும், அப்பட்டணத்தின் மக்களால் "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா" என்று வாழ்த்தி வரவேற்கப்பட்டதும் நமக்கு நன்கு அறிந்தவையாகும். 

குருத்தோலைகளும் பவனியும் ஓசன்னா என்ற சத்தமும் நமக்கு மிகவும் பழக்கமானதாகவும், நன்கு அறிந்ததாகவும் இருந்தாலும் இந்த ஓசன்னா என்பது நமது விசுவாச வாழ்வில் ஒரு முக்கியமானதாக இருக்கிறது. 

ஓசன்னா என்ற வார்த்தை, நவீன உலகில், ஒருவரை மகிமைப்படுத்தவோ அல்லது ஒரு நபர் மீது நமக்கு இருக்கும் மிகையான பாராட்டை தெரிவிக்கும் ஒரு வார்த்தையாகவோ அமைந்தாலும், இதன் ஆரம்பம் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளிலே உள்ளது என்பதை நாம் மறக்கமுடியாது. இந்த வார்த்தையைப்பற்றி நாம் மேலும் அறியும்போது, இது "எங்களை இரட்சியும்.. எங்களைக் காப்பாற்றும்..." என்று அர்த்தம் கொடுக்கிற ஒரு வார்த்தையாக இருந்ததை நாம் அறியலாம். எருசலேமின் மக்கள் இயேசு சுவாமியை ஆர்ப்பரித்து வரவேற்றபோது, "தாவீதின் குமாரனுக்கு வாழ்த்துக்கள், துதிகள், மகிமை, எமது ஆராதனை" என்று பொருள்படும்படியாக "ஓசன்னா" என்று சொன்னதுமன்றி, "இவரே எங்களை மீட்டெடுக்க, காப்பாற்ற, வாழ்வுதர" வரும் மேசியா என்பதையும் உணர்த்தினார்கள். 

இன்றும் நமது வாழ்விலே ஓசன்னா என்ற வார்த்தை இரண்டு முக்கியமான விசுவாச உண்மைகளை உணர்த்துகிறது. ஒன்று அது நம் ஆண்டவர் துதிக்கப்படத்தக்கவர், ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் என்ற உண்மையை ஒரு பக்கம் உணர்த்தும்போது, மறு பக்கம், இந்த ஆண்டவரே நம் வாழ்வில் தொடர்ந்தும் நம்மைக் காப்பாற்றி, வழிநடத்தி, நித்தியத்தில் சேர்ப்பவர் என்பதையும் காட்டுகிறது. ஒரு கிறிஸ்தவரின் வாழ்வில் எவ்வாறு துதியும் ஜெபமும் இன்றியமையாததோ, அதுவே இந்த வார்த்தையின் இரண்டு பக்கங்களும் ஆகின்றன.

ஆகையால், ஓசன்னா என்று நாம் உச்சரிக்கும், பாடும், வாசிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வார்த்தை நம்முடைய கிறிஸ்தவ விசுவாச வாழ்வின் இரண்டு பெரிய அங்கங்களாகிய துதியையும் ஜெபத்தையும் குறித்து நிற்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோமாக. 




 

Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...