Skip to main content

பர்மாவின் அப்போஸ்தலன் - அடோனிராம் ஜட்சன் (பாகம்-2) | FOOTPRINTS OF MISSIONARIES

 



by டேவிட் அண்ணா

>>>


(சென்ற வார கட்டுரையின் தொடர்ச்சி…….)

அந்நாட்களில் பர்மாவில் ஒரு மிஷனரி கூட இல்லை. எரிகிற வெயிலிலும் புழுதி நிறைந்த ‘ரங்கூன்;’ நகரத்திலும் சோர்வை உண்டாக்கும் சேறு நிறைந்த தெருக்களிலும் ஊழியம் செய்தனர் ஜட்சன் தம்பதியினர். புத்த மதத்தை அதிகமாகப் பின்பற்றிய பர்மிய மக்கள் மத்தியில் சாதி வேறுபாடில்லை. ஆனால் பர்மிய அரசன் பர்மாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனினதும் உள்ளத்தை சொந்தமாக்கி அவர்களை அடிமையாக நடத்திவந்தான். எந்த பர்மிய அரசனும் வேறுமதம் அங்கு பரவுவதை அனுமதிக்கவில்லை. நித்திய கடவுளைக் குறித்த நம்பிக்கையே அவர்களுக்கு கிடையாது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலேயே இவர்களது ஊழியம் ஆரம்பித்தது.


அந்நாட்களில் பர்மாவிலுள்ள ரங்கூன் (Rangoonபட்டணத்தில் கொடுங்கோல் ஆட்சியில் ஆர்வம் கொண்ட ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவ்வரசனின் ஒவ்வொரு விருப்பமும் நாட்டின் சட்டமாக மாறியது. அரசனும் மக்களும் ‘நாட்டின் மதம் புத்த மதம்’ என கருதி வந்தனர். அம் மதத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் குற்றம் புரிந்தவர்களாக கருதப்பட்டு, மரணதண்டனைக்கு ஆளானார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு பணிபுரிய ஆரம்பித்தனர் ஜட்சன் தம்பதியினர்.






முதலில் பர்மிய மொழியை நுட்பமாக கற்றுக்கொள்ள தினமும் பதினான்கு மணி நேரம் செலவழித்தனர். இவரது மனைவி நான்சியோ மற்றவர்களுடன் நன்றாகப் பேசி எளிதில் பர்மிய மொழியில் பேசக் கற்றுக்கொண்டார். கையியந்திரத்தை கொண்டு அநேக கைப்பிரதிகளை அச்சிட்டு வெளியிட்டனர். ஒருநாள் இவரது கைப்பிரதியைப் படித்துவிட்டு, ஒரு மனிதன் வீடுதேடி வந்து, ‘இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் அறிந்து கொள்ள இன்னும் புத்தகங்கள் தனக்குத் தேவை’ எனக் கேட்டான். உடனே தான் மொழிபெயர்த்து முடித்திருந்த மத்தேயு 5ம் அதிகாரத்தை அவனுடைய கையில் கொடுத்தார் ஜட்சன். இப்படியாக தாகமுள்ள ஆத்துமாக்களை தேவன் அங்கு எழுப்ப ஆரம்பித்தார். ஆறு வருடங்களாக தினமும் கிட்டத்தட்ட பதினைந்து மணி நேரம் பாடுபட்டதற்கு பிறகு முதன் முதலில் ‘Moung Nau’ என்ற பர்மியர் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பதினெட்டு பேர் ஞானஸ்நானம் எடுத்தனர். இதற்கிடையில் அதோனிராம் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழி பெயர்த்து முடித்து அதை அச்சிட்டு வெளியிட்டார்.




இவர்களது குடும்ப வாழ்வில், முதற் குழந்தை இறந்தே பிறந்தது. இரண்டாவது குழந்தையும் எட்டாவது மாதத்தில் இறந்தே போயிற்று. தட்பவெப்பநிலை ஒத்துக் கொள்ளாமல் ஜட்சனின் மனைவி நான்சி, அடிக்கடி சுகவீனமானார். தேவனின் கிருபை இவர்களின் கடின நேரத்தில் தாங்கியதால் ஊழியத்தில் முன்னேறிச் சென்றார். தங்களது மிஷன் பங்களா ஊருக்கு வெளியே அமைந்திருப்பதையிட்டு திருப்தியில்லாதிருந்த ஜட்சன், ஜனக்கூட்டம் மத்தியில் தங்களது வீடு அமைய வேண்டும் என்று தன் வீட்டை அங்கே மாற்றினார். இன்னும் மக்களுடன் மக்களாக பழக வேண்டும் என்ற தனது தரிசனத்தின் படி, மடம் போன்ற ஓர் அமைப்பை (Zayat) ஏற்படுத்தினார். இது எல்லா மக்களுக்கும் திறந்த வாசலையுடைய பொதுவானது. ‘யாரும் இங்கு வந்து இளைப்பாறி போதகத்தை கேட்கலாம், விவாதிக்கலாம்’ என்று கூறி தனது பங்களாவை ஒரு பொது இடமாக அமைத்தார். அங்கு ஞாயிறு தோறும் இயேசுவின் அருளை நினைத்து மக்கள் புகழ்ந்து பாடி துதித்தனர். ஆராதனை முடிந்த பின் முற்றத்திற்கு சென்று பாயொன்றில் அமர்ந்து மணிக்கணக்காக அதோனிராம் கிறிஸ்துவின் இரட்சிப்பை அறிவிப்பார்.


பிரிட்டிஷ் தேசத்திற்கும் பர்மா தேசத்திற்கும் இடையே யுத்தம் மூளவே மிஷனரிமார்களெல்லாரும் ஒற்றர்களாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடோனிராமும் கூட சிறையிலடைக்கப்பட்டார். 20 மாதங்களும் 6 வாரங்களும் கழித்து சிறையிலிருந்து விடுதலையடைந்தார். அவர் வீடு திரும்பிய போது அவரது மனைவி சுகவீனமாக இருந்தார்.



பிரிட்டிஷாருக்கும் பர்மியருக்கும் சமாதான மனப்பான்மையை நிலவச் செய்வதையும், கிறிஸ்தவ மத போதனைக்;கு சுதந்திரமளிப்பதையும் கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு உதவியளிக்க ஜட்சன் வெளியூருக்கு அழைக்கப்பட்டார். ஜட்சன் திரும்புவதற்குள் இவரது மனைவி ஒருவித காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்களெல்லாரும் எவ்வளவோ முயன்றனர்; பயனில்லை. 1826ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ‘நான்சி ஹசில்டன்’ அம்மையார் மரித்தார். ஆறு மாதத்திற்கு பிறகு அவரது மூன்றாவது குழந்தையும் மரித்துப் போனது. இதனால் அதிக மனச்சோர்வுக்குள்ளான ஜட்சன் மன நோயினால் சில காலம் அதிக கஷ்டப்பட்டார். எனினும் தேவ கிருபையினாலும், அவரது உடன் ஊழியர்களின் அன்பு மற்றும் அரவணைப்பினாலும் உடல்நலம் தேறினார் ஜட்சன். அதன் பின், முன்பைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடன் சிறந்த பணியாற்ற தேவன் அவருக்கு பக்கபலமாக இருந்து நடத்தினார். 

தன் மனைவியின் மறைவுக்குக்குப் பின் சுமார் இருபத்து நான்கு ஆண்டுகளாக பர்மாவிலே இறைபணியாற்றினார். கி.பி.1834ம் ஆண்டு வேதாகமம் முழுமையையும் பர்மிய மொழியில் மொழி பெயர்த்து முடித்தார். மேலும், பர்மிய மொழி அகராதியின் பெரும்பகுதியையும் தொகுத்து முடித்தார். இவரது மறைவின் போது, கிட்டத்தட்ட 63 இற்கும் மேற்பட்ட தேவாலயங்கள் பர்மியர்களிடையேயும் (Burmese) கரையர்களிடையேயும் (Karen People) காணப்பட்டன. ஜட்சன் நூற்றுக்கணக்கான விசுவாசிகளுக்கு தன் கையால் ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார். அத்துடன் பர்மாவிலுள்;ள ஓர் இனத்தவரான கரையர்கள் மத்தியில் ‘Ko Tha Byu’ `    1` என்பவர் முதன் முதலில் ஜட்சனின் ஊழியத்தின் மூலம் கி;றிஸ்துவை ஏற்றுக் கொண்டார். இவர் பிற்காலத்தில் ‘கரையர்களின் அப்போஸ்தலன்’ (முயசநn யுpழளவடந) என அழைக்கப்பட்டார். 25 வருட ஊழியக் காலப்பகுதியில் 11,878 கரையர்கள் தம் பாவங்களைவிட்டு மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் விசுவாசிகளானார்கள். இவ்வாறு பர்மா(மியன்மார்) எங்கும் எழுப்புதல் தீ பற்றியெரிந்தது. அனேகர் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து அவர் தரும் இரட்சிப்பை தம் வாழ்வில் பெற்றுக்கொண்டனர். 


இறுதியாக, ஜட்சன் தனது 62 வயதில், கி.பி.1850ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் திகதியன்று கப்பலிலே கடல் யாத்திரை சென்று கொண்டிருக்கும் போது அங்கேயே மரித்து, நடுக்கடலிலேயே அடக்கம் பண்ணப்பட்டார். தன் வாழ்க்கையைக் குறித்த தேவ சித்தத்தை சரிவர அறிந்து கொண்டவராய், எத்தனை பாடுகள், இழப்புக்கள் வந்தாலும் தான் முன் வைத்த காலை பின் வைக்காது, தேவன் தனக்குக் கொடுத்த ஊழியப் பொறுப்பை முழுமையாக செய்துமுடித்ததுடன், கிறிஸ்துவுக்குள்ளாக நல்ல ஓட்டத்தையும் ஓடி முடித்து, முடிவுபரியந்தம் விசுவாசத்தைக் காத்துக் கொண்டார் பர்மாவின் அப்போஸ்தலனாகிய அடோனிராம் ஜட்சன். அவருக்கு நீதியின் கிரீடம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருப்பது உறுதி. அன்று அடோனிராம் ஜட்சன் பர்மாவில் ஏற்றிய கிறிஸ்தவ தீபம் இன்றும் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் என் அருமை நண்பர்களே, அடோனிராமைப் போலவே நாமும் முதலில் நாம் இருக்குமிடத்தில், படிக்கும் பாடசாலையில் ஆண்டவரின் அன்பை பிறருக்கு எடுத்துக் கூற, சாட்சியான வாழ்வு வாழ, உப்பாய், வெளிச்சமாய் திகழ அழைக்கப்படுகிறோம். மேலும், தேவனுடைய சுவிசேஷ பணியை தேவனை அறியாத இடத்தில் செய்வதற்கு இன்றைக்கும் அழைப்பு உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. உங்கள் வசதி வாய்ப்புக்களைவிட்டு தேவன் காட்டும் இடத்திற்குச் செல்ல நீங்கள் ஆயத்தமா? கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவவில்லையோ?

“ விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு,

நித்தியஜீவனைப் பற்றிக்கொள்;

அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்…”

(1 தீமோத்தேயு 6:12)


வேதவாசிப்பு பகுதி : மத்தேயு 5:3-16, மத்தேயு 7:21





Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...