Skip to main content

இந்தியாவுக்கு வந்த ஒரு உன்னத சீடன் - அப்போஸ்தலன் தோமா - பாகம் 02 | Thomas the Apostle | FOOTPRINTS OF MISSIONARIES


by டேவிட் அண்ணா

>>>


‘ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.’ 
(தானியேல் 12:3) 

அன்பான தம்பி, தங்கைமாரே,

நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கடந்த வாரத்தில் நாம் இயேசுவின் சீடரும் கிறிஸ்தவ மிஷனரியுமான தோமா ஐயாவின் வாழ்விலிருந்து பல படிப்பினைகளை கற்றோமல்லவா? ஆம், அனைவருக்கும் அது பிரயோஜனமாய் இருந்திருக்கும் என நான் விசுவாசிக்கிறேன். இக்கட்டுரை வாயிலாக நாம் தோமா ஐயாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சென்று அவரது மிஷனரி ஊழியம் மற்றும் அவரது இறுதிக்கால சம்பவங்கள் குறித்து ஆராயவுள்ளோம். என்ன நீங்கள் ஆயத்தமா? வாருங்கள் ஆராய்வோம். 








சந்தேகத் தோமாவின் சந்தேகத்தைப் போக்கி, சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை சுமந்துசெல்லும் உன்னத சீடராக அவரை, நம் இயேசப்பா மாற்றினார். இதனால் மாறிய மனதுடன் மங்கல வாழ்விற்குள் புது நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்து, தன் சுவிசேஷப் பயணத்தை இஸ்ரவேலிலிருந்து தென்னிந்தியா நோக்கி தொடர்ந்தார் நம்ம தோமா ஐயா. 

இறுதியில் கி.பி. 52ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்து, கேரளாவில் முதன்முதலில் கால் பதித்தார். அங்கு இயேசுவின் அன்பையும், அவர் உயிர்த்தெழுதலின் செய்தியையும் அனைவருக்கும் பிரசங்கித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக கொடுங்கழூர் (Kodungalore), பாலையூர்(Palayur), பரவூர்(Paravur), கொக்கமங்கலம்(Kokkamankalam), நிரானாம்(Niranam), நிலக்கல்(Nilackal), கொயிலாகு(Quilon) ஆகிய ஏழு இடங்களில் ஆண்டவருடைய ஊழியத்தை உண்மையாகச் செய்தார். 

அதன் பிறகு மலபார் பகுதியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மைலாப்பூருக்கு(Mylapore) பயணித்து அங்குள்ள மக்களுக்கு இயேசுவின் அன்பையும் அவர் உயிர்த்தெழுந்த செய்தியையும் பிரசங்கித்தார். அத்தோடு அனேகருக்கு அன்பையும் பரிவையும் தன் செயலில் காட்டினார். இதனால் அனேக மக்கள் இயேசுவின் போதனைகளை விசுவாசித்து, தம் பாவங்களை விட்டு மனந்திரும்பி, ஆண்டவர் அருளும் சமாதானத்தை விடுதலையை தம் வாழ்வில் பெற்றனர். இதனால் வேற்று மத குருக்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் அறிவித்த இயேசுவையும் அவர்களுக்கு பிடிக்கவில்லை அத்துடன் அவரையும் கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் தோமாவை கொலைசெய்ய அவர்கள் சதித்திட்டம் போட்டார்கள். இதனால் தோமா ஐயா அவர்களுக்கு பயந்து ‘சின்னமலை’ (Little Mount) என்கிற இடத்திலுள்ள குகைகளில் சிலகாலம் ஒளிந்துவாழ்ந்தார். அங்கேயும் அவரை பின்தொடர்ந்தார்கள். பின்னர் இப்பொழுது ‘பறங்கி மலை’ என்றழைக்கப்படும் இடத்தில் தஞ்சம் புகுந்தார். அவரை பின்தொடர்ந்த மதகுருக்கள் தோமா தேவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் வாளினால் அவரைக் குத்திக் கொலை செய்தார்கள். தோமாவும் மற்றைய சீடர்களைப் போலவே கிறிஸ்துவுக்காய் இரத்தசாட்சியாய் மரித்தார். இவ்வாறு, கி.பி. 72ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் திகதி அன்று தோமா ஐயா இவ்வுலக வாழ்வில் தன் ஓட்டத்தை முடித்துக் கொண்டார்.

சற்று ஒருகணம் யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. மொழி தெரியாத நாட்டில், வானிலை முற்றிலும் வேறுபட்ட ஊரில் உணவுக்காக கஷ்டப்பட்டு, உடைக்காக கஷ்டப்பட்டு, இடத்திற்காக கஷ்டப்பட்டு, எதிரிகளால் விரட்டப்பட்டு உயிர்போகிற நேரம் வரைக்கும் இயேசுவை பகிர்ந்து கொண்டே இருந்தார் நம்ம தோமா ஐயா! 



நம்முடைய வாழ்க்கையிலும் கஷ்டம் வரும்போது நாம் இயேசுவை பகிர்ந்து கொள்ளுகிறோமா? அல்லது ‘என்னடா கடவுள் இவரெண்டு’ நம்மை படைத்த தேவனையே குறைகூறி, பழித்து பேசுகிறோமா?

இயேசுகிறிஸ்து உயிர்தெழவில்லை என்றால் தோமா எதற்கு இந்தியா வரவேண்டும்? இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தது பொய் என்றால் தோமா எதற்கு தன் உயிரையே பரிசாகக் கொடுக்க வேண்டும்? தோமா தன் உயிரையே தியாகம் செய்து, மெய்யாகவே இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தாரென்று நிரூபித்து விட்டார்.

இந்தியாவில் இன்று 2.78 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மட்டும் 1 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்தியாவிற்கு இயேசுவை அறிமுகப்படுத்திய உன்னத சீடன் தோமா என்று சொன்னால் மிகையாகாது. மேலும், ‘கிறிஸ்துவுக்காக மரிக்கும் ஒவ்வொரு இரத்தசாட்சியினதும் இரத்தம், திருச்சபைகளின் வித்து’ என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.

தோமாவுடைய பெயர் இவ்வுலகத்தில் எத்தனையோ கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டிருந்தாலும், அது பெரிதல்ல. அவரது பெயர் பரலோகத்திலுள்ள அஸ்திபாரமுள்ள கல்லில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதுவே பெரிய காரியம். தோமாவைப்போல இயேசுவுக்காய் வாழ்கிறவர்களின் பெயர்கள் நிச்சயமாய் பரலோகத்திலுள்ள ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. 

எனவே, நாம் நம்முடைய வாழ்க்கையில், வார்த்தையில், குணத்தில் மற்றவர்களுக்கு தோமாவைப்போல இயேசுவை அறிமுகப்படுத்துகிறோமா? சற்று எம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்; நண்பர்களே.

மற்றவர்கள் பார்க்கக்கூடிய ஒரே இயேசு கிறிஸ்து நாம் தான் –  அவர் அன்பைக் காட்டுவோம்! மற்றவர்கள் வாசிக்கக்கூடிய ஒரே வேதப்புத்தகம் நாம் தான் - அவர் நேசம் காட்டுவோம்! தேவன் தாமே உங்களனைவரோடும் கூட இருந்து, உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

வாசிக்க வேண்டிய வேதப்பகுதி : மத்தேயு 28:18-20, மாற்கு 8:34-38, மாற்கு 10:28-30





Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...