Skip to main content

நம் பெயர்களை அறிந்து அழைக்கும் ஆண்டவர் | BIBLE STUDY

by பிறேமன் அண்ணா
>>>

இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
(லூக்கா 19: 5, 6)


நம்மில் அநேகமானவர்கள் சகேயு என்னும் ஐசுவரியவானுக்கும் இயேசுவுக்கும் இடையே எரிகோவிலே நடந்த ஒரு ஆச்சரியமான புதுமையான சம்பவத்தைக் குறித்து படித்திருப்போம். இந்தச் சம்பவத்தை நாம் சிறுவர்களாக ஞாயிறு பாடசாலையிலே கற்றபோது நம்முடைய மனதில் பல ஞாபகங்கள் இந்தச் சம்பவம் பற்றி பதிந்திருக்கும். 

குள்ளனாயிருந்த சகேயு, காட்டத்தி மரம், இயேசுவைச் சுற்றிலும் ஜனக்கூட்டம், மற்றும் இன்னும் சில ஞாபகங்கள் இருக்கலாம். லூக்கா 19ம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்போது பின்வருமாறு அந்த சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. 

"அவர் (இயேசு) எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" (லூக்கா 19: 1 - 10). 

இந்த இளம்பிராயத்திலே இந்தச் சம்பவமானது நமக்கு மேலான ஒரு சத்தியத்தைக் கற்றுத்தருவதாய் உள்ளது. ஆண்டவர், தாம் படைத்த நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயர் பெயராக அறிந்திருக்கிறார் என்ற பெரிதான ஒரு உண்மையே அதுவாகும். நாம் வாசித்த இந்தப் பகுதியிலே, இயேசு சுவாமி "சகேயுவே..." என்று சொல்லி அவனது பெயரைச்சொல்லி அழைப்பதை அறிகிறோம். இயேசு சுவாமிக்கு இந்த சம்பவத்துக்கு முன் சகேயுவை சந்தித்ததுண்டா? சகேயு பற்றிய அறிமுகம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது? சகேயு இந்த ஆச்சரியத்தை கொஞ்சமும் எதிர்பாத்திருந்தானா? இல்லை என்பதே எல்லாவற்றுக்குமான பதில். ஆனாலும், இயேசு சுவாமி அவனைப் பெயரைச்சொல்லி அழைக்கின்றார். "சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்" என்றார். 

சகேயுவின் சமுதாயம், அவன் வாழ்ந்த சூழல் அவனை எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை ஆண்டவர் பொறுப்படுத்தவில்லை. ஆயக்காரருக்கு தலைவனும் ஐசுவரியவானாயும் இருந்த சகேயு அநியாயமாய் ஜனங்களிடம் பணம் அறவிடுகிறான் என்பதே பொதுவான அபிப்பிராயமாய் இருந்தது. ஆனாலும் இயேசு சுவாமி அவனைப் பெயர் சொல்லி அழைத்தது மட்டுமல்லாது, அவனின் வீட்டில் தான் தங்கவேண்டும் என்றும் கூறினார். நிச்சயமாகவே அன்றைக்கு சகேயுவின் வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. 

இன்றைக்கு ஆண்டவர் உங்களையும் உங்கள் பெயர்களை அறிந்து அழைக்கிறார். அவர் இன்றைக்கு நம் உள்ளங்களில் வந்து தங்க விரும்புகிறார். அவரை ஏற்றுக்கொண்டு நம் உள்ளங்களில் அவரை வரும்படி அழைக்கும்பொழுது, நமது வாழ்வுக்கும் நிச்சயம் இரட்சிப்பின் நாள் காத்திருக்கிறது. ஆகையால் நம் ஆண்டவர் இயேசு சுவாமியை, நம் பெயர்களையெல்லாம் அறிந்து நம்மை பெயர் சொல்லி அழைக்கும் ஆண்டவரை இன்று நம்முள் வாழ அழைப்போம். 

ஆண்டவர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 








Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...