Skip to main content

கர்த்தருக்கென வழியை ஆயத்தம் செய்தல் | BIBLE STUDY


by பிறேமன் அண்ணா

>>>


    இயேசு சுவாமி இந்த பூவுலகில் வந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு முன், அவருக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி யோவான் ஸ்நானகன் தெரிவு செய்யப்பட்டார். இயேசு சுவாமியின் வருகைக்கு இப்பூவுலகின் மாந்தரை ஆயத்தம் செய்யும் பொறுப்பு யோவான் மேலே விழுந்தது. இப்படியான ஒரு உன்னதமான ஊழியத்துக்கு தெரிவு செய்யப்பட்ட யோவானைக் குறித்தும் அவரது அதிசயமான பிறப்பைப் பற்றியும் முன்னறிவிக்கப்பட்டதை நாம் அநேகர் அறிவோம். இப்படியாக அறிவிக்கப்பட்ட அந்த ஆச்சரியமான செய்தியிலிருந்தே இன்று நாம் சில ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.

லூக்கா 1ம் அதிகாரத்திலே, யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவிக்கப்படும் பகுதியை நாம் பார்ப்போமானால், சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் பிறக்கப்போகும் இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என அறிவிக்கப்படுவதை நாம் காணலாம். 1ம் அதிகாரத்தின் 15ம் வசனம் இப்படியாய் சொல்கிறது... “அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாய் இருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.” (லூக்கா 1:15) இந்த வசனத்திலிருந்து கர்த்தருக்காக வழியை ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்ட ஒருவரிடம் காணப்பட வேண்டிய சில முக்கிய இயல்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மூன்று முக்கியமான காரியங்கள்.

முதலாவது, யோவான் கர்த்தருக்கு முன்பாய் பெரியவனாய் இருப்பான் என்று சொல்லப்படுகிறது. கர்த்தருடைய பார்வையில் நீ பெரியவனாய் இருக்க வேண்டும். உன்னுடைய வாழ்வின் சாட்சி, கர்த்தருக்கு முன்பாய் பெரியதை இருக்கவேண்டும். உன் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திருச்சபையார் முன்பில் நீ பெரியவனாய் இருக்கலாம். ஆனால், உன் இருதயத்தைக் காணும் கர்த்தருக்கு முன்பாய் நீ பெரியவனாய் இருக்கிறாயா? அதுதான் நீ கர்த்தருக்காய் வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தில் மிக முக்கியம்.

இரண்டாவது காரியம், யோவான் திராட்சரசமும் மதுவும் குடியான் என்று முன்னுரைக்கப்படுகிறது. இன்று உன்னுடைய வாழ்வில் இருக்கும் திராட்சரசமும் மதுவும் எவை என்று அறிவாயா தம்பியே தங்கையே? உன்னை மயக்குகின்ற காரியங்கள் எவை? நீ கர்த்தருடைய அன்பையும், அவர் பிரசன்னத்தையும், அவர் உனக்கு கொடுக்கும் மகிமையின் காரியங்களையும் நீ உணராத படிக்கு உன்னை மயக்கி வழிதவற செய்யும் காரியங்கள் எவை? அவற்றை இன்றே அறிந்து, கைவிடு. இல்லாவிட்டால் கர்த்தருக்கென இந்த கடைசி காலங்களில் அவரது வழியை ஆயத்தம் பண்ணுவது உனக்கு கடினமான ஒரு காரியம் ஆகிவிடும்.

மூன்றாவது. தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிறைக்கப்பட்டிருப்பான் என கூறப்படுகிறது. உன்னுடைய வாழ்வில் நீ பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் யாது? நீ செல்லும் இடமெல்லாம் அவருடைய பிரசன்னம் உன்னை சூழ்ந்திருப்பதையும், அவரது வழிநடத்துதல் உன்னோடு இருப்பதையும் உணர்கிறாயா? ஆராதனை வேளைகளில் மாத்திரமல்ல, நீ தனிமையில் இருக்கும்போதும் அவரது பிரசன்னத்துக்கு நீ இடம் கொடுக்கிறாயா? அவர் கொடுக்கும் வரங்களைப் பெற்று அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வதற்கு உன்னை நடத்தையை கடைப்பிடிக்கின்றாயா? மிகவும் முக்கியம்.

யோவான் ஸ்நானகனை வழியை ஆயத்தம் செய்பவனாய் ஏற்படுத்தின கர்த்தர் இன்று உன்னையும் அழைக்கிறார். 

 

வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 



Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...