Skip to main content

கர்த்தருக்கென வழியை ஆயத்தம் செய்தல் | BIBLE STUDY


by பிறேமன் அண்ணா

>>>


    இயேசு சுவாமி இந்த பூவுலகில் வந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு முன், அவருக்கு வழியை ஆயத்தம் செய்யும்படி யோவான் ஸ்நானகன் தெரிவு செய்யப்பட்டார். இயேசு சுவாமியின் வருகைக்கு இப்பூவுலகின் மாந்தரை ஆயத்தம் செய்யும் பொறுப்பு யோவான் மேலே விழுந்தது. இப்படியான ஒரு உன்னதமான ஊழியத்துக்கு தெரிவு செய்யப்பட்ட யோவானைக் குறித்தும் அவரது அதிசயமான பிறப்பைப் பற்றியும் முன்னறிவிக்கப்பட்டதை நாம் அநேகர் அறிவோம். இப்படியாக அறிவிக்கப்பட்ட அந்த ஆச்சரியமான செய்தியிலிருந்தே இன்று நாம் சில ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.

லூக்கா 1ம் அதிகாரத்திலே, யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவிக்கப்படும் பகுதியை நாம் பார்ப்போமானால், சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் பிறக்கப்போகும் இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என அறிவிக்கப்படுவதை நாம் காணலாம். 1ம் அதிகாரத்தின் 15ம் வசனம் இப்படியாய் சொல்கிறது... “அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாய் இருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.” (லூக்கா 1:15) இந்த வசனத்திலிருந்து கர்த்தருக்காக வழியை ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்ட ஒருவரிடம் காணப்பட வேண்டிய சில முக்கிய இயல்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மூன்று முக்கியமான காரியங்கள்.

முதலாவது, யோவான் கர்த்தருக்கு முன்பாய் பெரியவனாய் இருப்பான் என்று சொல்லப்படுகிறது. கர்த்தருடைய பார்வையில் நீ பெரியவனாய் இருக்க வேண்டும். உன்னுடைய வாழ்வின் சாட்சி, கர்த்தருக்கு முன்பாய் பெரியதை இருக்கவேண்டும். உன் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திருச்சபையார் முன்பில் நீ பெரியவனாய் இருக்கலாம். ஆனால், உன் இருதயத்தைக் காணும் கர்த்தருக்கு முன்பாய் நீ பெரியவனாய் இருக்கிறாயா? அதுதான் நீ கர்த்தருக்காய் வழியை ஆயத்தம் பண்ணும் ஊழியத்தில் மிக முக்கியம்.

இரண்டாவது காரியம், யோவான் திராட்சரசமும் மதுவும் குடியான் என்று முன்னுரைக்கப்படுகிறது. இன்று உன்னுடைய வாழ்வில் இருக்கும் திராட்சரசமும் மதுவும் எவை என்று அறிவாயா தம்பியே தங்கையே? உன்னை மயக்குகின்ற காரியங்கள் எவை? நீ கர்த்தருடைய அன்பையும், அவர் பிரசன்னத்தையும், அவர் உனக்கு கொடுக்கும் மகிமையின் காரியங்களையும் நீ உணராத படிக்கு உன்னை மயக்கி வழிதவற செய்யும் காரியங்கள் எவை? அவற்றை இன்றே அறிந்து, கைவிடு. இல்லாவிட்டால் கர்த்தருக்கென இந்த கடைசி காலங்களில் அவரது வழியை ஆயத்தம் பண்ணுவது உனக்கு கடினமான ஒரு காரியம் ஆகிவிடும்.

மூன்றாவது. தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிறைக்கப்பட்டிருப்பான் என கூறப்படுகிறது. உன்னுடைய வாழ்வில் நீ பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் யாது? நீ செல்லும் இடமெல்லாம் அவருடைய பிரசன்னம் உன்னை சூழ்ந்திருப்பதையும், அவரது வழிநடத்துதல் உன்னோடு இருப்பதையும் உணர்கிறாயா? ஆராதனை வேளைகளில் மாத்திரமல்ல, நீ தனிமையில் இருக்கும்போதும் அவரது பிரசன்னத்துக்கு நீ இடம் கொடுக்கிறாயா? அவர் கொடுக்கும் வரங்களைப் பெற்று அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வதற்கு உன்னை நடத்தையை கடைப்பிடிக்கின்றாயா? மிகவும் முக்கியம்.

யோவான் ஸ்நானகனை வழியை ஆயத்தம் செய்பவனாய் ஏற்படுத்தின கர்த்தர் இன்று உன்னையும் அழைக்கிறார். 

 

வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 



Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...