Skip to main content

ஒரு 'நற்செய்தி ஓவியர்' ஆக விருப்பமா? | GEM STONES


by பிறேமன் அண்ணா

>>>


நூற்றாண்டு காலங்களாக ஓவியக் கலை என்பது வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் தனிச்சிறப்புடன் சிறந்து விளங்கிய ஒரு கலை ஆகும். அழகியல் வெளிப்பாட்டுக்காக மட்டுமன்றி, பலதரப்பட்ட அரசியல், பொருளாதார, மனித வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதே சிறப்புடன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக ஓவியங்களும் ஓவியக் கலையும் திகழ்கின்றன.

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவ ஊழியங்கள், விசேடமாக நற்செய்தி பணியில் இசை என்பது பெருமளவில் பயன்படும் ஒன்றாகவும், வெளிப்படையாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், நிகழ்காலத்தில் YouTube ல் கிறிஸ்தவ நற்செய்தி மற்றும் ஆராதனை பாடல்களுக்கு இருக்கும் முக்கியத்தைக் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதே அளவுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஒன்றே ஓவியங்கள்.

கர்த்தரின் அபிஷேகம் நிரம்பிய, அர்ப்பணிக்கப்பட்ட அநேக நற்செய்தி ஓவியர்களைக் நம்மிடத்தே காணவேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.

எமது ஆண்டவரின் மேன்மையைப் பற்றியும், அவர் செய்த மற்றும் செய்து வருகிற ஆச்சரியங்கள் அதிசயங்களை, அவரது அன்பை, எதிர் காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் ஆவிக்குரிய மற்றும் உலகத்தின் சவால்கள் பற்றியும், தரிசனங்கள் பற்றியும், ஜெபத்தோடும் அர்ப்பணிப்போடும் ஓவியங்களை வரைந்து சமூகத்தில் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்தவ நற்செய்தி ஓவியர்கள் இன்றைக்கு நம் மத்தியில் வேண்டும். இந்த ஓவியர்களின் ஒவ்வொரு கோடுகளும் வர்ணங்களும் கர்த்தரின் மகிமைக்காகவும் அவரது மேன்மையின் வெளிப்பாடகவும் இருக்கவேண்டும். இந்த அர்ப்பணிப்பின் ஓவியர்களின் கரங்களும் சிந்தைகளும் கர்த்தரின் அபிஷேகம் நிரம்பியவையாக இருக்கட்டும். இரண்டு முக்கியமான விடையங்களை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்வது நல்லது.

ஒன்று, இந்த குறிப்பை வாசிக்கும்போதே உங்களுக்கு எழுந்திருக்கக்கூடிய ஒரு கேள்வி. “ஓவியக்கலை கற்றவர்கள் நம்மத்தியில் இல்லையே” என்பதாகும். இசையை, நடனத்தை கற்பதற்காக நம்மத்தியில் அநேக சந்தர்ப்பங்கள் இருக்கும்போது, ஓவிய கலையை எமது சிறார்களுக்கும் முறைப்படி கற்று தேறுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமலா உள்ளது. ஓவிய கலையில் ஆர்வம் உள்ள ஒவ்வொரு தம்பி தங்கையும் இந்த ஊழியத்துக்காக ஆயத்தப்பட வேண்டும் என்றால், நிச்சயம் அதற்குரிய வழியை ஆண்டவர் திறந்து கொடுப்பார். தேடிச் சென்று முறைப்படி கற்று கொண்டு ஊழியத்துக்கு ஆயத்தப்படல் முக்கியம்.

இரண்டாவது, அநேகருக்கு எழும் கேள்வி “இந்த ஓவியங்களை வைத்துக்கொண்டு எப்படி நற்செய்தி பகிர்வது?” என்பதாகும். நமது சமூகத்தில் அழகியல் செயற்பாடுகள் மூலமாக நற்செய்தி பகிர்வது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த வெளிப்பாடுகளில் உள்ள அழகியல் அம்சமானது மற்றவர்களை இலகுவில் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. நிகழ்காலத்தில் இப்படியான அழகியல் வெளிப்பாடுகளை பகிர்வதற்கு அநேக சந்தப்பங்களும் இடங்களும் உள்ளன. சஞ்சிகைகள், வலைத்தளங்கள் விசேடமாக சமூக வலைத்தளங்கள் என்பன ஒரு பெரும் சந்தர்ப்பம் என்றே சொல்லவேண்டும். ஆனால் இவற்றுக்கும் மேலாக, மனித நடமாட்டங்கள் உள்ள எந்தவொரு வீதியோ சந்திகளோ இவற்றுக்கு விதிவிலக்கு அல்ல.

ஒரு நற்செய்தி ஓவியத்துடன் வீதியருகே நிற்கும் ஒரு நற்செய்தி ஓவியன் என் கண்களில் எப்போதும் உள்ளான். ஜெபத்துடனும் அர்ப்பணிப்புடனும் வரைந்த அந்த அழகான பேசும் ஓவியத்தால் கவரப்பட்டு வீதி வழியாக சென்ற ஒருவர் அதனருகே வந்து அந்த ஓவியத்தை உற்று நோக்குவதையும் காண்கிறேன். “இந்த ஓவியத்தைப் பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன்” என்று அவர் வினவுவதும் என் காதுகளில் கேட்கின்றன. கர்த்தரின் அபிஷேகத்தின் வாலிப ஓவியன் அவனுக்கு கர்த்தரின் அன்பை பற்றி சொல்வதை கண்டு மகிழ்கிறேன். இரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாவை நினைத்து பரலோகத்தில் சந்தோஷம் உண்டாக்குவதையும் உணர்கிறேன்.

இது நம் வாலிபர் மத்தியில் வேண்டும்! நற்செய்தி ஓவியர்கள் நம் மத்தியிலும் வேண்டும்! அந்த நாளை காண்பது என் மனதின் அவா!

* இச்சிந்தனையானது 2018ம் ஆண்டில் "வாலிபன்" மாதாந்த சஞ்சிகையில் என்னால் பகிரப்பட்டது.



வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 



Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...