Skip to main content

ஒரு 'நற்செய்தி ஓவியர்' ஆக விருப்பமா? | GEM STONES


by பிறேமன் அண்ணா

>>>


நூற்றாண்டு காலங்களாக ஓவியக் கலை என்பது வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் தனிச்சிறப்புடன் சிறந்து விளங்கிய ஒரு கலை ஆகும். அழகியல் வெளிப்பாட்டுக்காக மட்டுமன்றி, பலதரப்பட்ட அரசியல், பொருளாதார, மனித வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதே சிறப்புடன், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக ஓவியங்களும் ஓவியக் கலையும் திகழ்கின்றன.

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவ ஊழியங்கள், விசேடமாக நற்செய்தி பணியில் இசை என்பது பெருமளவில் பயன்படும் ஒன்றாகவும், வெளிப்படையாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், நிகழ்காலத்தில் YouTube ல் கிறிஸ்தவ நற்செய்தி மற்றும் ஆராதனை பாடல்களுக்கு இருக்கும் முக்கியத்தைக் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதே அளவுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஒன்றே ஓவியங்கள்.

கர்த்தரின் அபிஷேகம் நிரம்பிய, அர்ப்பணிக்கப்பட்ட அநேக நற்செய்தி ஓவியர்களைக் நம்மிடத்தே காணவேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.

எமது ஆண்டவரின் மேன்மையைப் பற்றியும், அவர் செய்த மற்றும் செய்து வருகிற ஆச்சரியங்கள் அதிசயங்களை, அவரது அன்பை, எதிர் காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் ஆவிக்குரிய மற்றும் உலகத்தின் சவால்கள் பற்றியும், தரிசனங்கள் பற்றியும், ஜெபத்தோடும் அர்ப்பணிப்போடும் ஓவியங்களை வரைந்து சமூகத்தில் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்தவ நற்செய்தி ஓவியர்கள் இன்றைக்கு நம் மத்தியில் வேண்டும். இந்த ஓவியர்களின் ஒவ்வொரு கோடுகளும் வர்ணங்களும் கர்த்தரின் மகிமைக்காகவும் அவரது மேன்மையின் வெளிப்பாடகவும் இருக்கவேண்டும். இந்த அர்ப்பணிப்பின் ஓவியர்களின் கரங்களும் சிந்தைகளும் கர்த்தரின் அபிஷேகம் நிரம்பியவையாக இருக்கட்டும். இரண்டு முக்கியமான விடையங்களை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்வது நல்லது.

ஒன்று, இந்த குறிப்பை வாசிக்கும்போதே உங்களுக்கு எழுந்திருக்கக்கூடிய ஒரு கேள்வி. “ஓவியக்கலை கற்றவர்கள் நம்மத்தியில் இல்லையே” என்பதாகும். இசையை, நடனத்தை கற்பதற்காக நம்மத்தியில் அநேக சந்தர்ப்பங்கள் இருக்கும்போது, ஓவிய கலையை எமது சிறார்களுக்கும் முறைப்படி கற்று தேறுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமலா உள்ளது. ஓவிய கலையில் ஆர்வம் உள்ள ஒவ்வொரு தம்பி தங்கையும் இந்த ஊழியத்துக்காக ஆயத்தப்பட வேண்டும் என்றால், நிச்சயம் அதற்குரிய வழியை ஆண்டவர் திறந்து கொடுப்பார். தேடிச் சென்று முறைப்படி கற்று கொண்டு ஊழியத்துக்கு ஆயத்தப்படல் முக்கியம்.

இரண்டாவது, அநேகருக்கு எழும் கேள்வி “இந்த ஓவியங்களை வைத்துக்கொண்டு எப்படி நற்செய்தி பகிர்வது?” என்பதாகும். நமது சமூகத்தில் அழகியல் செயற்பாடுகள் மூலமாக நற்செய்தி பகிர்வது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த வெளிப்பாடுகளில் உள்ள அழகியல் அம்சமானது மற்றவர்களை இலகுவில் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. நிகழ்காலத்தில் இப்படியான அழகியல் வெளிப்பாடுகளை பகிர்வதற்கு அநேக சந்தப்பங்களும் இடங்களும் உள்ளன. சஞ்சிகைகள், வலைத்தளங்கள் விசேடமாக சமூக வலைத்தளங்கள் என்பன ஒரு பெரும் சந்தர்ப்பம் என்றே சொல்லவேண்டும். ஆனால் இவற்றுக்கும் மேலாக, மனித நடமாட்டங்கள் உள்ள எந்தவொரு வீதியோ சந்திகளோ இவற்றுக்கு விதிவிலக்கு அல்ல.

ஒரு நற்செய்தி ஓவியத்துடன் வீதியருகே நிற்கும் ஒரு நற்செய்தி ஓவியன் என் கண்களில் எப்போதும் உள்ளான். ஜெபத்துடனும் அர்ப்பணிப்புடனும் வரைந்த அந்த அழகான பேசும் ஓவியத்தால் கவரப்பட்டு வீதி வழியாக சென்ற ஒருவர் அதனருகே வந்து அந்த ஓவியத்தை உற்று நோக்குவதையும் காண்கிறேன். “இந்த ஓவியத்தைப் பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன்” என்று அவர் வினவுவதும் என் காதுகளில் கேட்கின்றன. கர்த்தரின் அபிஷேகத்தின் வாலிப ஓவியன் அவனுக்கு கர்த்தரின் அன்பை பற்றி சொல்வதை கண்டு மகிழ்கிறேன். இரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாவை நினைத்து பரலோகத்தில் சந்தோஷம் உண்டாக்குவதையும் உணர்கிறேன்.

இது நம் வாலிபர் மத்தியில் வேண்டும்! நற்செய்தி ஓவியர்கள் நம் மத்தியிலும் வேண்டும்! அந்த நாளை காண்பது என் மனதின் அவா!

* இச்சிந்தனையானது 2018ம் ஆண்டில் "வாலிபன்" மாதாந்த சஞ்சிகையில் என்னால் பகிரப்பட்டது.



வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 



Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...