Skip to main content

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" | BIBLE STUDY


by பிறேமன் அண்ணா
>>>

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது."
(மத்தேயு 05: 14)




எனது அன்பின் தங்கை தம்பிமாரே,

நமது ஆண்டவர் இயேசு சுவாமி இவ்வுலகில் நம்மிடையே வாழ்ந்த காலங்களில் நமக்குக் கற்றுத்தந்த ஒரு பெரிதான பாக்கியமான அழைப்பைக் குறித்து இன்று உங்களோடு பேச விரும்புகிறேன். 

மேலே நாம் வாசித்த வேத வசனமானது எம் வாழ்விலே ஒரு மிக முக்கியமான ஒரு உண்மையையும் நமது ஆண்டவர் நமக்கு அளித்த ஒரு விஷேட அழைப்பையும் நமக்கு உணர்த்துகிறது. 

நமது கர்த்தர் இவ்வுலகைப் படைத்து, அதில் முதலாவதாக வெளிச்சத்தை உண்டாக்கி, அந்த வெளிச்சம் "நல்லது என்று தேவன் கண்டார்" என்று வேதம் நமக்கு சொல்லுகிறது (ஆதியாகமம் 01: 04). அது மட்டுமல்லாது, தேவன் நல்லது என்று கண்ட அந்த வெளிச்சத்தை இருளிலிருந்து வேறாகப் பிரித்தார். இதுவே ஆண்டவரின் விருப்பம். இதுவே நமது கர்த்தரின்  திட்டம். 

வெளிச்சத்தை நல்லதென்று கண்டு, அதை இருளிலிருந்து பிரித்த நம் தேவன், நம் ஒவ்வொருவரையும் இந்த உலகத்துக்கு ஒரு வெளிச்சமாக, நன்மையாக, நல்லதொன்றாக நமது வாழ்வும் இவ்வுலகில் அமைய நம்மை அழைக்கிறார். 

மேலே நாம் வாசித்த வசனமான மத்தேயு 05: 14 இல் இயேசு சுவாமி நம்மை ஒரு வெளிச்சமாக அழைப்பது மட்டுமல்லாது, நம்மை மலையின் மேல் உள்ள பட்டணமாகவும் வைத்திருக்கிறார் என்பதை ஞாபகப் படுத்துகிறார். மலையின் மேல் உள்ள பட்டணம், உயர்ந்த இடத்திலே இருப்பதால் அதை யாவராலும் காணக்கூடியதாக இருக்கும்.

ஆகையால் இரண்டு உண்மைகள் நமக்கு வெளிப்படுகின்றன. ஒன்று வெளிச்சம் , மற்றது உயரம். ஆண்டவர் நம்மை இவ்வுலகில் தனது வெளிச்சமாக வைத்தது மட்டுமின்றி, நம்மைத் தமது பிள்ளைகளாக அழைத்து ஒரு உயர்ந்த மகிமையுள்ள ஒரு ஸ்தானத்திலேயும் வைத்திருக்கிறார். ஆகையால் நமது அழைப்பு பெரிதானது. ஆண்டவரின் வெளிச்சத்தைப் பிரகாசிப்பதும், உயர்வான இடத்திலிருந்து பூமியின் எல்லைகள் எங்கும் இந்த வெளிச்சம் போய் சேரும்படியாக அவருடைய நாமத்தை மற்றவர் அறியப்பண்ணுவதுமே நமது உயர்ந்த அழைப்பாகும். 

நாம் வளர்ந்து வரும் நாட்களிலே, எந்த துறையிலே, எந்த உயர்வான கல்வியிலே, பதவியிலே இருந்தாலும், அந்த அந்த இடங்களிலே ஆண்டவரின் வெளிச்சத்தை நாம் பிறர் மீது காட்டும் அன்பாலும், ஆதரவாலும் பிரகாசிக்கப்பண்ண அழைக்கப்படுகிறோம். இந்த உயர்வான அழைப்பை அறிந்து நம் தேவனுக்காய் நாம் கவனமாக வளருவோம். அவருடைய உயர்வான வெளிச்சமாய் இந்த உலகிலே வாழுவோம். 

ஆண்டவர்தாமே நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துவாராக. 




Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...