Skip to main content

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" | BIBLE STUDY


by பிறேமன் அண்ணா
>>>

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது."
(மத்தேயு 05: 14)




எனது அன்பின் தங்கை தம்பிமாரே,

நமது ஆண்டவர் இயேசு சுவாமி இவ்வுலகில் நம்மிடையே வாழ்ந்த காலங்களில் நமக்குக் கற்றுத்தந்த ஒரு பெரிதான பாக்கியமான அழைப்பைக் குறித்து இன்று உங்களோடு பேச விரும்புகிறேன். 

மேலே நாம் வாசித்த வேத வசனமானது எம் வாழ்விலே ஒரு மிக முக்கியமான ஒரு உண்மையையும் நமது ஆண்டவர் நமக்கு அளித்த ஒரு விஷேட அழைப்பையும் நமக்கு உணர்த்துகிறது. 

நமது கர்த்தர் இவ்வுலகைப் படைத்து, அதில் முதலாவதாக வெளிச்சத்தை உண்டாக்கி, அந்த வெளிச்சம் "நல்லது என்று தேவன் கண்டார்" என்று வேதம் நமக்கு சொல்லுகிறது (ஆதியாகமம் 01: 04). அது மட்டுமல்லாது, தேவன் நல்லது என்று கண்ட அந்த வெளிச்சத்தை இருளிலிருந்து வேறாகப் பிரித்தார். இதுவே ஆண்டவரின் விருப்பம். இதுவே நமது கர்த்தரின்  திட்டம். 

வெளிச்சத்தை நல்லதென்று கண்டு, அதை இருளிலிருந்து பிரித்த நம் தேவன், நம் ஒவ்வொருவரையும் இந்த உலகத்துக்கு ஒரு வெளிச்சமாக, நன்மையாக, நல்லதொன்றாக நமது வாழ்வும் இவ்வுலகில் அமைய நம்மை அழைக்கிறார். 

மேலே நாம் வாசித்த வசனமான மத்தேயு 05: 14 இல் இயேசு சுவாமி நம்மை ஒரு வெளிச்சமாக அழைப்பது மட்டுமல்லாது, நம்மை மலையின் மேல் உள்ள பட்டணமாகவும் வைத்திருக்கிறார் என்பதை ஞாபகப் படுத்துகிறார். மலையின் மேல் உள்ள பட்டணம், உயர்ந்த இடத்திலே இருப்பதால் அதை யாவராலும் காணக்கூடியதாக இருக்கும்.

ஆகையால் இரண்டு உண்மைகள் நமக்கு வெளிப்படுகின்றன. ஒன்று வெளிச்சம் , மற்றது உயரம். ஆண்டவர் நம்மை இவ்வுலகில் தனது வெளிச்சமாக வைத்தது மட்டுமின்றி, நம்மைத் தமது பிள்ளைகளாக அழைத்து ஒரு உயர்ந்த மகிமையுள்ள ஒரு ஸ்தானத்திலேயும் வைத்திருக்கிறார். ஆகையால் நமது அழைப்பு பெரிதானது. ஆண்டவரின் வெளிச்சத்தைப் பிரகாசிப்பதும், உயர்வான இடத்திலிருந்து பூமியின் எல்லைகள் எங்கும் இந்த வெளிச்சம் போய் சேரும்படியாக அவருடைய நாமத்தை மற்றவர் அறியப்பண்ணுவதுமே நமது உயர்ந்த அழைப்பாகும். 

நாம் வளர்ந்து வரும் நாட்களிலே, எந்த துறையிலே, எந்த உயர்வான கல்வியிலே, பதவியிலே இருந்தாலும், அந்த அந்த இடங்களிலே ஆண்டவரின் வெளிச்சத்தை நாம் பிறர் மீது காட்டும் அன்பாலும், ஆதரவாலும் பிரகாசிக்கப்பண்ண அழைக்கப்படுகிறோம். இந்த உயர்வான அழைப்பை அறிந்து நம் தேவனுக்காய் நாம் கவனமாக வளருவோம். அவருடைய உயர்வான வெளிச்சமாய் இந்த உலகிலே வாழுவோம். 

ஆண்டவர்தாமே நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துவாராக. 




Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...