Skip to main content

ஞானத்துடன் செயற்படுவோம் | SHORT STORY



by ரஜீவனி அக்கா
>>>


ஓர் கிராமத்தில் அந்தோனி எனும் ஒரு ஏழை மனிதன் வசித்து வந்தார். அவர் நேர்மையானவரும் சிறந்த உழைப்பாளியுமாக இருந்தார். அவர் ஓர் நாள் ஊருக்கு ஒதுக்கு புறம் இருந்த ஒரு பொது நிலமொன்றில் ஒரு மாமரக் கன்றை நட்டார். அதை தினமும் கரிசனையுடன் பாதுகாத்து நீரூற்றி வளர்த்து வந்தார். வருடங்கள் ஓடின.... சிறிய மரமானது பெரிய விருட்சமாக செழிப்பாக வளர்ந்து நின்றது. இந்த மரம் ஊரில் இருந்த மற்றைய மாமரங்களை விட மிகவும் இனிமையான கனிகளை தந்து கொண்டிருந்தது... அதின் கனிகளை விற்று பணமாக்கியது போக மீதமானதை மற்றவர்களுக்கு கொடுத்து பகிர்ந்து வந்தார்.

அதே ஊரிலே சபரி என்னும் பேர் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... மற்றவர்களுடைய உடைமைகளை ஏமாற்றி அபகரிப்பதில் கில்லாடியாக இருந்தான். அது மட்டுமல்லாமல் தனது முரட்டுக் குணத்தால் மற்றவர்களின் பயத்தையும் பெற்றிருந்தான்...

சபரி, அந்தோனி நட்ட மாமரத்தின் மேல் கண் வைத்தான்... எப்படியாவது அந்த மரத்தை தனக்கு சொந்தம் கொண்டாடி அதின் முழு பலனையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற கெட்ட சிந்தனை அவனுக்கு ஏற்பட்டது. இதனால் அவன் ஒரு போலி நாடகத்தை நடத்த திட்டமிட்டான்.

அந்தோனி மறு நாள் காலையில் மாம்பழங்களை பறித்து விற்பனை செய்வதற்காக கனிகளை பறிக்க புறப்பட்டான்... இதனை முன்னமே அறிந்த சபரி, அந்தோனி செல்வதற்கு முன்னமே அங்கு சென்று மாம்பழங்களை பறிக்க ஆரம்பித்தான். இதை கண்ட அந்தோனி, " சபரி, என்ன காரியம் செய்கிறாய்? ஏன் என்னுடைய மரத்து கனிகளை என்னை கேட்காமல் பறிக்கிறாய்"?? என்று கேட்டார். அதற்கு அவன் " நான் யாரை கேட்க வேண்டும்?? இது என்னுடைய மரம். நான் நட்ட மரத்தின் கனிகளை நான் பறிப்பேன்" என சொல்லி மரத்துக்கு சொந்தம் கொண்டாடினான். அந்தோனி எவ்வளவு விவாதித்தும் அது தனக்கு சொந்தமான மரம் என்று பிடிவாதமாய் நின்றான் சபரி..

அக்கம் பக்கம் இருந்த ஜனங்களுக்கு உண்மையான உரிமையாளன் யார் என்பது தெரிந்தும் சபரியின் முரட்டுக் குணத்திற்குப் பயந்து அந்தோனிக்கு ஆதரவளிக்க பயந்தனர். இவர்களது வாக்குவாதத்தை பார்த்துக் கொண்டு நின்ற ஒருவன் இவர்களிடம் அந்த ஊர் தலைவர் பொன்னம்பலம் ஐயாவிடம் சென்று நியாயத்தை கேட்குமாறு சொன்னார். அதற்கு இருவரும் சம்மதிக்கவே ஊர் தலைவரிடம் இந்த பிரச்சனை தெரிவிக்கப்பட்டது. ஊர்த் தலைவர், சம்மந்தப்பட்ட நபர்களை மறு நாள் அந்த மாமரத்தடிக்கு வரும் படியாக கட்டளையிட்டார்.

மறு நாள் சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், ஊர் ஜனங்களில் சிலரும் என்ன நடக்க போகின்றது என வேடிக்கை பார்க்க அவ்விடத்தில் ஒன்று கூடினர். அந்தோனி ஊர்த் தலைவரிடம் , "ஐயா, இத்தனை ஆண்டுகளாக நான் தான் இம்மரத்தை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன். இப்பொது சபரி இது தனக்கு சொந்தம் என்கிறான். இதற்கு நீங்கள் ஒரு முடிவு கூற வேண்டும் என கேட்டுக் கொண்டான்." அதற்கு சபரி, "அப்படியல்ல நான் தான் இத்தனை ஆண்டுகளாக வளர்த்து வந்தேன் திடீரென இவர் என்னை ஏமாற்றி உரிமை கொண்டாடுகிறார்" என்று கூறினான். மாறி மாறி இருவரும் இதையே சொல்லிக் கொண்டிருந்தனர்.

1 இராஜாக்கள் 3: 16-28 இல் சாலமோன் ராஜாவும் இதே போல ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தைக்காக உரிமை கொண்டாடிய இரு தாய்களுக்கு எவ்வாறு ஒரு சரியான முடிவை எடுத்தார் என்பதை நாம் வாசிக்க முடியும். அவ்வாறே ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாமும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குள் நாம் அனேக நேரம் தள்ளப்படுகிறோம்... அது சில சமயம் நம்மை சார்ந்த விடயமாக இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய சந்தர்ப்பமாகவும் இருக்கலாம். இதிலே நாம் எப்படி நமது ஞானத்தை உபயோகிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.

ஊர்த் தலைவர் சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தார். " சரி இதற்கு நான் ஒரு நல்ல முடிவு தருகிறேன். பேசாமல் இந்த மரத்தை முழுமையாக வெட்டிப் போடுவோம். யாருக்கும் இது சொந்தமாக இருக்க தேவையில்லை. இதில் கிடைக்கும் கனிகளை சரி சமனாக இருவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள். பிரச்சனை முடிந்தது." உடனே அதற்கு சபரி, "ஐயா இது ஒரு நல்ல முடிவு. அதையே செய்வோம்" என்றான். ஆனால் அந்தோனியோ மிகவும் துக்கம் கொண்டு, "ஐயா, அப்படி ஒருபோதும் செய்து விடாதீர்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இதை வளர்த்தேன் என்பது எனக்குத்தான் தெரியும். எனக்கு எதுவுமே வேண்டாம். இதை இவனே வைத்துக் கொள்ளட்டும். மரத்தை மாத்திரம் வெட்டாதீர்கள்" என்று சொல்லி அழுதான்.

உடனே ஊர்த் தலைவருக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பது புலப்பட்டது. உடனே அந்தோனிக்குத்தான் மரம் சொந்தம் என கூறி, சபரியை நன்கு திட்டி கண்டித்து துரத்தி விட்டார். ஊர் மக்கள், ஊர்த்தலைவர் பொன்னம்பலம் ஐயாவின் இந்த புத்திசாலித்தனமான தீர்ப்பை கண்டு அவரை மிகவும் பாராட்டினர்.

என் அன்புக்குரிய சகோதரர்களே...

இவ்வாறான நேரங்களில் நம்முடைய ஆலோசனை கர்த்தராகிய தூய ஆவியானவரின் துணை கொண்டு நல்ல முடிவுகளை எடுக்க பழகுவோம்...

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !!!



Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...