Skip to main content

நம்பிக்கை | SHORT STORY




by ரஜீவனி அக்கா
>>>

ஒரு வணிகர் வியாபார ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்காக விமானம் ஏறினார். அது மூன்று பேர் அமரும் இருக்கை ஒரு நடுத்தர வயது பெண் ஜன்னலோரமும் , நடைபாதை அருகே ஒரு  சிறிய பெண்னும் இருந்தார்கள். இவர் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தவாறே தனது பெட்டியை மேலே வைத்துவிட்டு நடுவில் அமர்ந்தார்.

அவர் அந்த சிறு பெண்ணை பார்க்கும்போது தனது மகளை நினைத்தார் இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும் ... அந்த பெண் அமைதியாக வண்ணம் தீட்டி கொண்டிருந்தாள். அவரும் அந்த பெண்ணிடம் எப்போதும் போல் பேர் என்ன பொழுதுபோக்கு என்ன என்று பேச்சு கொடுத்துக்கொண்டு வந்தார்.

அதே போல் உனக்கு  பிடித்த விலங்கு எது ??? போன்ற ஒரு சில வழக்கமான கேள்வியும், கேட்டு பேசிக்கொண்டு இருந்தார் . அவர் மனதில்  இந்த சின்ன பெண் தனியாக பயணம் செய்வது விசித்திரமாக பட்டது. ஆனால் அவர் தன்னை தனது எண்ணங்களை தன்னுள்ளே புதைத்து வைத்துக்கொண்டார். 

எனினும் பயணம் முழுவதிலும் அவள் மீது ஒரு கண் வைக்கவேண்டும் என நினைத்தார் ... அவரும் பெண்ணை பெற்றவரல்லவா ??? சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் , விமானம் திடீரென குலுங்க தொடங்கியது . பைலட் ஒலிப்பெருக்கியின் மூலம் பயணிகளிடம்  நாம் கடினமான வானிலையை எதிர் கொண்டிருக்கிறோம் , தங்கள் இருக்கையில் பெல்ட்கள் போட்டுகொண்டு , அமைதியாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் கூறினார். அடுத்த அரை மணி நேரத்திற்கு மேல் பல முறை விமானம் குலுக்க, கடுமையான தாழ்நிலைகளும் மற்றும் திருப்பங்களை செய்து கொண்டும் சென்றது ...சிலர் உயிர் பயத்தில் அழுது கொண்டு இருந்தனர்  மற்றும் பலர்  பக்கத்து இருக்கை பெண்மணிபோல் பிராத்தனை செய்துகொண்டிருந்தனர் ...

இத்துணை விஷயங்கள் நடந்தபோதும் அந்த சிறிய பெண் மிகவும் அமைதியாக இருந்தாள் .. அவள் கலரிங் புக் பென்சில் எல்லாத்தையும் பாக்  செய்துவிட்டு அமைதியான முகத்துடன் இருந்தாள் ..இவருக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை.

ஒரு வழியாக விமானம் தன்னிலை அடைந்தது ...

மீண்டும் பைலட்  நிலைமை சுமூகமானதையும் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்க போவதாகவும் அறிவித்தார் ..

அத்தனை பயணிகளிடம் இருந்தும் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. பின் அவர் அந்த சின்ன பெண்ணை நோக்கி .. பாராட்டுதலாக இந்த சிறுவயதில் உனக்கு எவ்வளவு மனதைரியம் ..

பெரியவர்கள் அனைவரும் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும்போது நீ மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாக இருந்தாய் ????..என கேள்வியுடன் முடித்தார் ..

அந்த பெண் சிரித்துக்க்கொண்டே பைலட் என் தந்தை அவர் எப்படியும் என்னை கவனமாக தரையிறக்குவார் என எனக்கு தெரியும் எனவே நான் பயப்படவில்லை என கூறினாள் ..

அந்த குழந்தைக்கு தன் தந்தையின் மீது இருந்த நம்பிக்கை ...நம்மில் பலருக்கு நாம் வணங்கும் தெய்வத்தின் மீதுகூட இல்லை நம்பிக்கை வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் 

வேதாகமத்தில் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ என்ற நான்கு வாலிபர்கள் தேவனுக்காக வைராக்கியங்கொண்டு அவரையே நம்பி இருந்தபடியால் அந்த நால்வரையும் தேவன் அக்கினி ஜுவிலையிலிருந்து விடுவித்தார். இதற்கு முந்தைய அநேக பரிசுத்தவான்கள் இருந்தாலும் அவர்கள் ஏதாகிலும் ஒரு வழியில் நம்பிக்கை கொடுப்பார். 

உதாரணமாக தமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலமாய் அல்லது ஆசாரியர்கள் மூலமாய் தேவன் அவர்களை தைரியமூட்டி அவர்களை வழிநடத்துவார். அதனால் அவர்கள் எதையும் நம்பிக்கையோடு செய்தார்கள். ஆனால் இந்த நால்வருக்கும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தேவன் அவர்களுக்கு நம்பிகையூட்டவில்லை. ஆயினும் அவர்கள் நால்வரும் தேவன் மீது அதீத நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தபடியால் அவர்கள் மரண ஆக்கினையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

கஷ்டத்தின் காலத்தில் மட்டும் தேவன் மீது நம்பிக்கை வைப்பது அவரை இழிவுபடுத்துவதற்கு சமம். ஆனாலும் தேவன் நம்மை விடுவிப்பார் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். வேதம் இவ்வாறு கூறுகிறது,

ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.


1 பேதுரு 1:13 ,எனவே தெளிந்த புத்தியோடு தேவன் மேல் நம்பிக்கை வைப்போம் தேவ கிருபையை பெற்றுக் கொள்வோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !!!



Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...